முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆதரவு கூட்டு எதிரணியினரால் நேற்றைய தினம் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த கொழும்பை முற்றுகையிட்டு அரசாங்கத்தைக் கவிழ்க்கும் போராட்டம் அதன் இலக்கை அடையாமற் தோல்விகண்டிருப்பதாக டுவிட்டர் தளத்தில் பலரும் கருத்துக்களைப் பதிவேற்றம் செய்துள்ளனர்.எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை எவ்வாறு ஒழுங்கமைப்பது என்பது பற்றி நாமல் ராஜபக்ஷ இன்னமும் நிறையவே கற்றுக்கொள்ள வேண்டியுள்ளதாக சண்டே டைம்ஸ் பத்திரிகையின் சிரேஷ்ட ஊடகவியலாளர் சாந்தனி கிரிந்தே தெரிவித்துள்ளார்.நேற்றைய ஆர்ப்பாட்டததில் 25000ற்கும் 50 000ற்கும் இடைப்பட்ட எண்ணிக்கையிலானவர்களே பங்கெடுத்திருப்பதாக முன்னணி செய்தியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்