Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாட்டை நேசிக்கும் ஒழுக்கமான அரசியல் பயணம் எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுடன் ஆரம்பமாகும்

January 11, 2018
in News, Politics
0

பணப் பையை திருடிக்கொண்டு ஓடும் கள்வனின் பின்னால் கூச்சலிடுவதைப்போல இன்று பாராளுமன்றத்தில் உள்ள இரு சாராரும் ஒருவரை ஒருவர் குற்றஞ் சாட்டிக்கொள்கின்றனர். ஆனால் உண்மையான திருடர்களை மக்கள் நன்கு அறிவார்கள் என ஜனாதிபதி தெரிவித்தார்.

நேற்று (10) பிற்பகல் அநுராதபுரம் சல்காது விளையாட்டரங்கில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போது ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் ஏற்பாடு செய்துள்ள மக்கள் சந்திப்புக்களின் முதல் சந்திப்பாகவே இன்று ”சுதந்திரத்தின் மக்கள் சந்திப்பு” எனும் பெயரில் பெருந்திரலான மக்களின் பங்குபற்றுதலோடு இந்த மக்கள் சந்திப்பு இடம்பெற்றது.

நாட்டை நேசிக்கும் ஒழுக்க விழுமியங்களுடன் கூடிய அரசியல் பயணத்தில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றியுடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகளுடன் அடியெடுத்து வைப்போமென தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், அரசியலுக்கு பிரவேசித்ததன் பின்னர் பணம் சம்பாதித்து தமது பைகளை நிரப்பிக்கொண்டு மக்களின் மனசாட்சியை எட்டி உதைத்து செல்வந்தர் ஆகுவதற்கு எதிர்வரும் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் எந்தவொரு பிரதிநிதிக்கும் இடமளிக்கப்பட மாட்டாதென மக்களுக்கு உறுதிமொழி வழங்கினார்.

2015 ஜனாதிபதி தேர்தலின் அப்போதைய அரசாங்கம் தோல்வியடைவதற்கு ஏதுவான பல காரணங்கள் காணப்பட்ட போதிலும் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் மேற்கொண்ட ஊழல் மோசடி மற்றும் முறையற்ற செயற்பாடுகளே முக்கிய காரணமாகுமென குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், பிரதேச சபைகளுக்கும், மாகாண சபைகளுக்கும், பாராளுமன்றத்திற்கும், பிரதமர் பதவிக்கும், ஜனாதிபதியாகவும் தெரிவு செய்யப்பட்டும் எந்தவொரு நபருக்கும் மக்களின் பணத்தை கையாடல் செய்வதற்கு உரிமையில்லை என வலியுறுத்தினார்.

எல்லா தேர்தல்களின் போதும் வாக்குறுதியளிக்கப்பட்ட, ஆயினும் நிறைவேற்றப்படாத மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் நிர்மாணப்பணிகளை பூர்த்தி செய்து ரஜரட்ட மக்களுக்கு வழங்கியமையானது அந்த விவசாய மக்களுக்காக நிறைவேற்றப்பட்ட வரலாற்று ரீதியான பொறுப்பாகுமென ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். தற்போது உரிமை கொண்டாட எத்தனிக்கும் சிலர் ஐந்து வருடங்களாகியும் ஒரு சதத்தையேனும் வழங்காதவர்களே என்பது கவலைக்குரிய விடயமாகுமென குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், அன்றே இதன் நிர்மாணப் பணிகள் நிறைவு செய்யப்பட்டிருப்பின் மொரகஹகந்த நீரினால் ரஜரட்ட பிரதேசத்தின் வயல் நிலங்கள் இதற்கு ஐந்து வருடங்களுக்கு முன்னரே செழிப்படைந்திருக்குமெனக் குறிப்பிட்டார்.

இராணுவத்தினர் பழிவாங்கப்படுவதாக இன்று அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டாலும் உண்மையான பழிவாங்கல்கள் இடம்பெற்றது, கடந்த காலத்தில் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா சிறை பிடிக்கப்பட்ட சந்தர்ப்பத்திலாகுமென தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், சர்வதேசத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட குற்றச்சாட்டுக்களிலிருந்து இராணுவத்தினர், கடற்படை மற்றும் விமானப் படையினரை பாதுகாத்து அவர்களது கௌரவத்தையும் அபிமானத்தையும் பேணுவதற்காக கடமையை தற்போதைய அரசாங்கமே நிறைவேற்றி வருகின்றதென்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்களென தெரிவித்தார்.

தேசபற்று நாட்டின் அடையாளம் மற்றும் எமது உரிமைகளை பாதுகாத்து என்றும் தாய் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் முற்போக்கு அரசியல் இயக்கமான ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியுடன் இணைந்து எதிர்காலத்தில் தூய்மையான அரசியல் செயற்பாடுகளின் ஊடாக சுபீட்சமிக்க நாட்டை கட்டியெழுப்ப நாட்டை நேசிக்கும் அனைவரும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அவர்கள் மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியினதும் பொதுஜன முன்னணியினதும் தேசிய சுதந்திர முன்னணியினதும் செயற்பாட்டாளர்கள் பலரும் சுயேட்சைக் குழுக்களை பிரதிநிதித்துவம் செய்த அபேட்சகர்கள் பெரும்பாலானோரும் இதன்போது ஜனாதிபதி அவர்கள் முனுனெடுக்கும் செயற்பாடுகளுக்கு ஆதரவு தெரிவித்து மேடைக்கு வருகை தந்தமை விசேட அம்சமாகும்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் துமிந்த திசாநாயக்க, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேமஜயந்த, அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களும் மக்கள் பிரதிநிதிகள் பலரும் இந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

Previous Post

தமிழ்த் தேசிய விடுதலை கூட்டமைப்பு பெயரைப் பயன்படுத்துவதற்குத் தடை

Next Post

சௌதி அரேபியாவில் ஒருபாலின திருமணத்தில் கலந்துகொண்டவர்கள் கைது

Next Post
சௌதி அரேபியாவில் ஒருபாலின திருமணத்தில் கலந்துகொண்டவர்கள் கைது

சௌதி அரேபியாவில் ஒருபாலின திருமணத்தில் கலந்துகொண்டவர்கள் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

பாடசாலை பரீட்சைகள் மற்றும் விடுமுறை – கல்வி அமைச்சின் அறிவிப்பு

June 1, 2026
19 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை!

நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 1 மில்லியனை கடந்தது

June 1, 2026
ஐபிஎல் 2026 சம்பியன் பட்டத்தை சூடப்போவது யார்?  பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் 2026 சம்பியன் பட்டத்தை சூடப்போவது யார்? பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை

May 31, 2026
ராஜபக்ச ஆட்சியில் தான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொலை | ஞா. சிறிநேசன்

ராஜபக்ச ஆட்சியில் தான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொலை | ஞா. சிறிநேசன்

May 31, 2026

Recent News

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

பாடசாலை பரீட்சைகள் மற்றும் விடுமுறை – கல்வி அமைச்சின் அறிவிப்பு

June 1, 2026
19 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை!

நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 1 மில்லியனை கடந்தது

June 1, 2026
ஐபிஎல் 2026 சம்பியன் பட்டத்தை சூடப்போவது யார்?  பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் 2026 சம்பியன் பட்டத்தை சூடப்போவது யார்? பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை

May 31, 2026
ராஜபக்ச ஆட்சியில் தான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொலை | ஞா. சிறிநேசன்

ராஜபக்ச ஆட்சியில் தான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொலை | ஞா. சிறிநேசன்

May 31, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures