Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாட்டு மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும் – விமல் கோரிக்கை

April 11, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான திட்டமெதுவம் வரவு – செலவுத் திட்டத்தில் இல்லை | விமல்

அரசாங்கத்துக்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுபவர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் வகையில் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

நுகேகொடை பகுதியில் திங்கட்கிழமை (10) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான நிபந்தனைகளை அமுல்படுத்துவதை தவிர மாற்றுத்திட்டங்கள் ஏதும் அரசாங்கத்திடம் கிடையாது.

தேசிய தொழிற்துறையை மேம்படுத்துவது தொடர்பில் நடைமுறைக்கு சாத்தியமான எந்த திட்டங்களும் செயற்படுத்தப்படவில்லை.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைக்கு அமைய தேசிய வளங்களையும்,அரச நிறுவனங்களையும் விற்று பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வு காண முடியாது.

அரச நிறுவனங்களை தனியார்மயப்படுத்துவது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிரதான பொருளாதார கொள்கையாக உள்ளது.

அரச நிறுவனங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கினால் தேசிய மட்ட தொழிற்துறை மோசமாக பாதிக்கப்படும் நிலை தோற்றம் பெறும்.

அரச நிறுவனங்களை தனியார்மயப்படுத்தும் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு மக்கள் மத்தியில் இருந்து கடுமையான எதிர்ப்பு தோற்றம் பெறும்.

மக்கள் போராட்டத்தை முடக்குவதற்காகவே உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனநாயக போராட்டத்தில் ஈடுபடும் சகலரும் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்படுவார்கள்.

இந்த சட்டமூலத்தை நிறைவேற்ற இடமளிக்க கூடாது. நாட்டு மக்கள் சகலரும் ஒன்றிணைந்து கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும்.

2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் நாட்டு மக்கள் ஐக்கிய தேசிய கட்சியை முழுமையாக புறக்கணித்தார்கள். ஆகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங் மக்களின் அபிலாசைகளுக்கு மதிப்பளிப்பதில்லை.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான பொருத்தல் அரசாங்கத்தில் சுதந்திர மக்கள் கூட்டணியின் உறுப்பினர்கள் எவரும் ஒன்றிணைய போவதில்லை. ஐக்கிய மக்கள் சக்தியின் பெரும்பாலான உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் ஒன்றிணைவார்கள் என்றார்.

Previous Post

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஆசியுடன் தொடங்கிய ‘நயன்தாரா 75’

Next Post

சீன இராணுவம் யுத்தத்திற்கு தயார்- மூன்று நாள் ஒத்திகையின் பின்னர் அறிவிப்பு

Next Post
சீன இராணுவம் யுத்தத்திற்கு தயார்- மூன்று நாள் ஒத்திகையின் பின்னர் அறிவிப்பு

சீன இராணுவம் யுத்தத்திற்கு தயார்- மூன்று நாள் ஒத்திகையின் பின்னர் அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures