Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாட்டு மக்கள் அவதானத்துடன் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் | உதய கம்மன்பில

March 13, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
நாட்டு மக்கள் அவதானத்துடன் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் | உதய கம்மன்பில

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவின் கொள்கையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பின்பற்றுகின்றார். ஆகவே, ஜனநாயகத்துக்காக போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

நாவல பகுதியில் இன்று (12) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அரசியலமைப்புக்கு அமைய தீர்மானங்களை முன்னெடுத்தாலும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தேர்தலுக்கு இணக்கம் தெரிவித்தால் மாத்திரம்தான் தேர்தல் இடம்பெறும் என பொதுஜன பெரமுனவின் உள்ளக பேச்சுவார்த்தையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தலை நடத்த இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொதுஜன பெரமுனவுக்கு வாக்குறுதி வழங்கிய காரணத்தினால் தான் பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுதந்திரமாக கிரிக்கெட் விளையாடுகிறார்கள்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சியில் இருக்கும்போது ஜனநாயகம் பற்றி முழு உலகத்துக்கும் பாடம் கற்பிப்பார்கள். ஆனால், அதிகாரத்துக்கு வந்ததன் பின்னர் சர்வாதிகாரம் குறித்து உலகுக்கு பாடம் கற்பிப்பார்கள்.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்தன ஜனநாயகத்துக்கு எதிராக செயற்படும்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜே.ஆர். ஜெயவர்தனவின் கொள்கையை பின்பற்றுகிறார். ஆகவே, ஜனநாயக உரிமைக்காக போராடும் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனநாயகத்துக்கு எதிராக செயற்படும்போது போர்க்கொடி தூக்கிய கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரகங்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஜனநாயகத்துக்கு எதிரான செயற்பாடுகளை கண்டும் காணாதது போல் இருப்பது கவலைக்குரியது என்றார்.

Previous Post

முழு இலங்கையையும் சோகத்தில் ஆழ்த்திய ஒரு குடும்பத்தின் மரணம்! உண்மையில் நடந்தது என்ன?

Next Post

இத்தாலியின் கடற்பரப்பில் தத்தளித்துக்கொண்டிருந்த படகுகளிலிருந்து 1000க்கும் அதிகமான குடியேற்றவாசிகள் மீட்பு

Next Post
இத்தாலியின் கடற்பரப்பில் தத்தளித்துக்கொண்டிருந்த படகுகளிலிருந்து 1000க்கும் அதிகமான குடியேற்றவாசிகள் மீட்பு

இத்தாலியின் கடற்பரப்பில் தத்தளித்துக்கொண்டிருந்த படகுகளிலிருந்து 1000க்கும் அதிகமான குடியேற்றவாசிகள் மீட்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures