Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாட்டில் பதிவாகும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

August 28, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
விவசாயத்துறையை வலுப்படுத்த நீண்டகால ஒருங்கிணைந்த தேசிய செயற்றிட்டம் தேவை | ஜனாதிபதி 

நாட்டில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 89 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களின் போது 48 பேர் உயிரிழந்துள்ளதுடன் 50 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதிகளவான துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பாதாள உலக கும்பல்களுக்கு இடையிலான மோதல்கள் காரணமாக இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

களுத்துறை மாவட்டத்தின் பண்டாரகமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மாத்திரம் 7 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அதிகளவான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பாதாள உலக கும்பலைச் சேர்ந்த ”குடு சலிந்து” என்பவரின் தரப்பினரால் ”நிலங்க” என்பவரின் தரப்பினரை இலக்கு வைத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

“புதிய பயங்கரவாதச் சட்ட வரைவு: ‘வெள்ளை அறிக்கை’யை உடனடியாக வெளியிடக் கோரி நீதியமைச்சரிடம் கடிதம்”

Next Post

எறும்புண்ணியின் இறைச்சியுடன் ஒருவர் கைது!

Next Post
எறும்புண்ணியின் இறைச்சியுடன் ஒருவர் கைது!

எறும்புண்ணியின் இறைச்சியுடன் ஒருவர் கைது!

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures