ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாய்லாந்துக்கான தனது தனிப்பட்ட விஜயத்தை முடித்துக் கொண்டு நேற்று (30) இரவு 11.00 மணிக்கு நாட்டை வந்தடைந்துள்ளார்.
ஸ்ரீ லங்கன் விமான சேவையின் யு.எல். 407 என்ற இலக்க விமானத்தில் இவர் இலங்கையை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த24 ஆம் திகதி தாய்லாந்து சென்றிருந்தார்.
குடும்ப உறுப்பினர்களுடன் தாய்லாந்து சென்றிருந்த ஜனாதிபதி அந்நாட்டிலுள்ள சமய ஸ்தானங்கள் பலவற்றுக்கு விஜயங்களை மேற்கொண்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது.
ஓய்வுக்கான சுற்றுலாவாக இது அமைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.