Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாடாளுமன்றத்தைக் கலைப்பதா இல்லையா..?

September 5, 2019
in News, Politics, World
0

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நாடாளுமன்றத்தைக் கலைப்பதா இல்லையா என்பதை நாடாளுமன்றமே தீர்மானிக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று கருத்து தெரிவித்தபோதே பிரதமர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தேர்தலின் பின்னர், எதிர்வரும் சில மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தைக் கலைப்பதாயின், நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக தீர்மானிக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2020 ஆம் ஆண்டிற்கான வரவு – செலவுத்திட்டம் இந்த வருடத்திற்குள் சமர்ப்பிக்கப்பட மாட்டாது எனவும், இந்த வருடத்திற்குள் ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் பிரகாரம் செலவீனங்களை முன்னெடுப்பதற்கு நேரி்டுள்ளதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்து உரையாற்றியபோதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

2020 ஆம் ஆண்டிற்காக சாதாரண வழிமுறையின் பிரகாரம் 2019 ஆம் ஆண்டிலேயே வரவு – செலவுத்திட்டத்தை சமர்ப்பிக்காதிருக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நவம்பர், டிசம்பர் ஆகிய இரண்டு மாதங்களில் ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகள் இடம்பெறவுள்ள நிலையில், வரவு – செலவுத்திட்டம் இதுவரை சமர்ப்பிக்கப்படாத ஒரு நிலையில், நிதி விரயம் ஏற்படாது என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் பிரகாரமே இந்த வருடத்திற்கான செலவீனங்கள் யாவும் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்,

இதேவேளை, இடைக்கால கணக்கறிக்கையின் ஊடாக ஒதுக்கீடு செய்யப்படும் நிதி, நாட்டின் சட்டதிட்டங்கள், சுற்றறிக்கைகளின் பிரகாரமே செலவிடப்படும் என்பதால், புதிதாக எந்தவொரு அபிவிருத்தித் திட்டமும் உள்ளீர்க்கப்பட மாட்டாது என பிரதமர் மேலும் கூறியுள்ளார்.

கடந்த 1988 ஆம் ஆண்டிலும், 1999 ஆம் ஆண்டிலும் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர், வரவு – செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டது.

எனினும் கடந்த காலங்களில் நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதியிடம் காணப்பட்டதாக குறிப்பிட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அந்த அதிகாரம் தற்போது நாடாளுமன்றத்திடமே இருப்பதாக தெரிவித்தார்.

ஆகவே நாடாளுமன்றத்தை உடனடியாகக் கலைக்க வேண்டுமாயின், அதற்கு நாடாளுமன்றத்தின் இணக்கத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளதாகவும், அதுகுறித்து கட்சித் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களே தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

களனிவௌி ரயில்பாதையூடான ரயில் சேவை தாமதமடைந்துள்ளது

Next Post

மாவை முன்னிலையில் தற்கொலை முயற்சி

Next Post

மாவை முன்னிலையில் தற்கொலை முயற்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

June 30, 2026
பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

June 30, 2026
ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

June 30, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

கொத்துரொட்டி உணவக உரிமையாளர் பிணையில் விடுதலை

June 30, 2026

Recent News

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

June 30, 2026
பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

June 30, 2026
ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

June 30, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

கொத்துரொட்டி உணவக உரிமையாளர் பிணையில் விடுதலை

June 30, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures