கன்னட நடிகையான ராஷ்மிகா மந்தனா, தெலுங்கில் வெளியான ‛கீதா கோவிந்தம், டியர் காம்ரேட்’ படங்களின் மூலம் பிரபலமானார். தற்போது தமிழில் கார்த்தி உடன் ‛சுல்தான்’ படத்தில் நடித்து வருகிறார். ராஷ்மிகா தனது குழந்தை பருவத்து போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருந்தார். இதை விஷமி ரசிகர் ஒருவர், அந்த போட்டோக்களை சமூக வலைளத்தில் பதிவிட்டு, ‛இந்த சிறுமி எதிர்காலத்தில் விலைமாதுவாக இருப்பார்’ என பதிவிட்டார்.
இதனால் கோபமான ராஷ்மிகா, ‛‛நடிகைகள் என்றால் உங்களுக்கு இளக்காரமா. இதுபோன்று தகாத வார்த்தைகளால் விமர்சிக்க எப்படி உங்களுக்கு தைரியம் வருகிறது. சினிமாவில் நான் நடிக்கும் வேலையைப்பற்றி எது வேண்டுமானாலும் சொல்லுங்கள். ஆனால் எங்கள் குடும்பம் மற்றும் சொந்த வாழ்க்கையைப்பற்றி கண்டபடி சொல்வதற்கு யாருக்கும் உரிமை கிடையாது.
ஒவ்வொரு தொழிலும் மிகுந்த மரியாதைக்குரியது. மக்கள் அதை புரிந்து கொள்ள வேண்டும். ஒருவரையொருவர் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். இனி இதுபோன்ற பதிவுகள் வந்தால் தகுந்த பதிலடி கிடைக்கும். உங்கள் புத்தியை நினைத்தால் அருவெருப்பாக உள்ளது என தனது கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.