Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

நடிகர் ஜித்தன் ரமேஷ் வெளியிட்ட’ பெண் கோடு ‘ ( Pen Code)திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

September 10, 2025
in Cinema, News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
நடிகர் ஜித்தன் ரமேஷ் வெளியிட்ட’ பெண் கோடு ‘ ( Pen Code)திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

மலையாள நடிகர் அருண் சாக்கோ- சரீஷ் தேவ் ஆகிய இருவரும் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் ‘பெண் கோடு’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான ஜித்தன் ரமேஷ் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இயக்குநர் அருண் ராஜ் பூத்தனல் எழுதி இயக்கும் இந்த திரைப்படத்தில் அருண் சாக்கோ, சரீஷ் தேவ், லட்சுமி சாந்தா,  சோனா, திரவிய பாண்டியன், கார்த்திகா ஸ்ரீராஜ், உன்னி காவியா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அருண் ராஜா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தினேஷ் பாண்டியன் இசையமைத்துள்ளார். கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஆஸ்த்திரியா மூவி புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜே என் கே எல் கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பிரவீதா ஆர். பிரசன்னா,  நித்ய காசி லட்சுமி ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” ஆணும், பெண்ணும் ஒன்றல்ல . இரண்டும் வெவ்வேறானவை. பெண்களுக்கென சில பிரத்யேகமான எண்ணங்கள் உண்டு. அதனை தெரிந்து கொள்வதற்காக நாயகன் அவர்களின் உலகத்தில் ஊடுருவுகிறான். இதனை மையப்படுத்தி தான் இந்த ‘பெண் கோடு’ எனும் திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது”  என்றார்.

தமிழ் – மலையாளம் என இரு மொழிகளிலும் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தினை எதிர்வரும் நவம்பர் மாதத்தில் வெளியிடுவதற்கான திட்டமிடல் நடைபெற்று வருவதாக படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Previous Post

10 கிலோ கிராம் குஷ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது

Next Post

அற்புதன், மகேஸ்வரி, ரூபவாஹினி ராஜா ஆகியோரை கொலை செய்தது ஈ.பி.டி.பியினரே! – சதா

Next Post
அற்புதன், மகேஸ்வரி, ரூபவாஹினி ராஜா ஆகியோரை கொலை செய்தது ஈ.பி.டி.பியினரே! – சதா

அற்புதன், மகேஸ்வரி, ரூபவாஹினி ராஜா ஆகியோரை கொலை செய்தது ஈ.பி.டி.பியினரே! - சதா

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures