ஆந்திராவைச் சேர்ந்த தொழில் அதிபர் சிக்ருபதி ஜெயராம், கடந்த ஜனவரி மாதம் படுகொலை செய்யப்பட்டார். விஜயவாடாவிலிருந்து ஐதராபாத் வரும் வழியில் தேசிய நெடுஞ்சாலையில் அவரை வழிமறித்த மர்ம கும்பல் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடியது. இதுகுறித்து ஜூப்ளி ஹில்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த வழக்கில் ராகேஷ் ரெட்டி என்ற தொழிலதிபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த கொலைக்கும், தெலுங்கு காமெடி நடிகர் சூர்ய பிரசாத்துக்கும் தொடர்பிருந்தது தெரியவந்தது. இதையொட்டி நேற்று சூரிய பிரசாத், அவரது உதவியாளர் கிஷோர், துணை நடிகை அஞ்சு ரெட்டி ஆகியோர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இது தெலுங்கு சினிமா உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.