ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் வரையிலுள்ள காலப் பகுதியில் காணி உறுதிகள் வழங்கப்படுதல், நடமாடும் சேவை நடாத்துதல் என்பன தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அரச அதிகாரிகளுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் நவம்பர் 30 ஆம் திகதி வரையிலும் எந்தவொரு வேட்பாளரையும் ஆதரித்து இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படக் கூடாது எனவும் மீறி நடைபெற்றால், அதற்கான முழுப் பொறுப்பையும் சம்பந்தப்பட்ட அரச அதிகாரி ஏற்க வேண்டி வரும் எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலை எதிர்வரும் தினங்களில் வெளியிடவுள்ளதாகவும் ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.