இந்த ஆண்டு கா.பொ.த உயர்தரம் மற்றும் கா.பொ.த சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல் வெளியாகியுள்ளது.
குறித்த மாணவர்கள் தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்காக இம்மாதம் 31 ஆம் திகதிக்கு முன் விண்ணப்பிக்குமாறு ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இம்முறை தேசிய அடையாள அட்டையை தயாரிக்கும் போது புகைப்படங்களை பெற்றுக்கொள்ளல் ஒன்லைன் முறையில் இடம்பெறவுள்ளதாக அந்த திணைக்களத்தின் ஆணையாளர் வியானி குணதிலக்க குறிப்பிட்டுள்ளார்.