Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தென்கயிலை ஆதீனம் மீதான தாக்குதல் வழக்கின்போது கவனத்தில் எடுக்கப்படும்!

July 22, 2019
in News, Politics, World
0

திருகோணமலை, கன்னியா பிள்ளையார் ஆலயம் அமைந்திருந்த பிரதேசத்தில் விகாரை அமைக்கும்  பணிகளைத் தடுப்பதற்காக சாத்வீக ரீதியில் எதிர்ப்புத் தெரிவித்த தென் கயிலை ஆதீனத்தைச் சேர்ந்த அகத்தியர் அடிகளார், கன்னியா பிள்ளையார் ஆலய உரிமையாளர் கோகில ரமணி அம்மையார் ஆகியோர் மீது மேற்கொள்ளப்பட்ட அநாகரிகச் செயற்பாடுகள் தொடர்பில் வழக்கு விசாரணைகளின்போது கவனத்தில் கொள்ளப்படும்.

 

– இவ்வாறு தெரிவித்தார் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்.

தமிழர்களின் பாரம்பரிய பூமியாகிய கன்னியாவில் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் விகாரை அமைப்பது தொடர்பில் ஆலய உரிமையாளரான ரமணி அம்மாவின் கோரிக்கைக்கு அமைவாக அவரை பிரதான மனுதாரராகக் கொண்ட வழக்கில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இன்று ஆஜராகி வாதாடி இடைக்காலத் தடை உத்தரவை பெற்றுக்கொடுத்தார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தவை வருமாறு;-

இந்து பக்தர்கள் தலைமுறை தலைமுறையாக ஆயிரம் ஆண்டுகளாக செய்துவந்த கடமைகளை தொல்பொருள் திணைக்களம் தடுக்கின்றது என்ற முறைப்பாடு திருகோணமலை மேல்நீதிமன்றத்தில் பிள்ளையார் ஆலய உரிமையாளர் ரமணி அம்மாவால் முன்வைக்கப்பட்டது. இது தொடர்பாக எழுத்தாணைகள் வழங்குகின்ற அதிகாரம் மாகாண மேல்நீதிமன்றத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. காணி அதிகாரம் மாகாணசபைக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்ற காரணத்தினாலே காணி பிணக்குத் தொடர்பாக எவரையும் கட்டுப்படுத்துகின்ற அதிகாரத்தை மேல் நீதிமன்றம் வழங்க முடியும்.

ஆகவே, இன்றைக்கு திருகோணமலை மேல்நீதிமன்றம் எங்களுடைய எழுத்தானை மனுவைப் பரிசீலித்து, நீதிமன்ற நியாயாதிக்கத்துக்கு உட்பட்டதாகக் கருதி, இந்த வழக்கு சம்பந்தமாக எதிர்மனுதாரருக்கு நாங்கள் கொடுத்த அறிவித்தல் முறையே சேர்ப்பிக்கப்பட்டது என்பதையும் உறுதி செய்து, இந்த இடைக்காலத் தடை உத்தரவு நாங்கள் கேட்டவற்றில் ஐந்தில் நான்கை இன்றைக்கு வழங்கியிருக்கின்றது.

இந்தத் தடை உத்தரவுகளில், பிள்ளையார் கோவிலை மீளக் கட்டுவதை எவரும் தடுக்கக்கூடாது என்ற உத்தரவை மட்டும் நீதிமன்றம் வழங்கவில்லை. அது சம்பந்தமாக தொல்பொருள் திணைக்களம் வர்த்தமாணிப் பிரசுரம் ஒன்றைச் செய்திருப்பதன் காரணமாக அதுதொடர்பாக இந்த வழக்கின் இடையிலே அல்லது முடிவிலே இரு தரப்பினரையும் விசாரித்து ஒரு தீர்ப்பு கொடுப்பதாகச் சொல்லப்பட்டிருக்கின்றது. மிக முக்கிய விடயங்களான மற்றைய நான்கிற்கும் இடைக்காலத் தடை உத்தரவு கொடுக்கப்பட்டிருக்கின்றது.

நீதிமன்றக் கட்டளைகளையும் நீதிமன்றப் பதிவாளர் ஊடாக அனுப்புகின்ற அறிவித்தலையும் எதிர்மனுதாரர்கள் இருவருக்கும் அனுப்பி, அவர்கள் நீதிமன்றத்திலே எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி சமுகமளிக்குமாறு அழைப்பாணையும் அனுப்பப்பட்டிருக்கின்றது.

இதில் நாம் முன்வைத்த ஒரு கோரிக்கை, இந்த வெண்ணீர் ஊற்றுக்களிலேதான் இந்துக்கள் இறந்த தம் மூதாதையர்களுடைய ஞாபகார்த்தமாகப் பிதிர் கடமைகளைச் செய்துவருகின்றமை வழக்கம். அதிலேயும் விசேடமாக ஆடி அமாவாசையன்று இதனை தந்தையை இழந்த அனைவரும் செய்கின்றமை வழக்கம். எனவே, வருகின்ற 31 ஆம் திகதி இந்து பக்தர்கள்  ஆடி அமாவாசையன்று பிதிர்க்கடன் செலுத்த அங்கு செல்லத் தடுப்பார்கள். அப்படி தடுக்கக்கூடாது என்று தடை உத்தரவு இப்போது கொடுக்கப்பட்டுள்ளது. இந்துக்கள் வருகின்ற ஆடி அமாவாசையில் எவ்வித தடையுமின்றி தமது பிதிர்க்கடன்களை ஆற்றலாம். முழு இந்து சமூகத்துக்குமாக ரமணி அம்மையார் மனுத்தாக்கல் செய்துள்ளார். அவருக்கு நன்றிகளைத் தெரிவிக்கின்றேன்.

தென்கயிலை ஆதீனம், ரமணி அம்மா ஆகியோர் மீதான தாக்குதலையும் நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன். இந்து மக்கள் அனைவர் மனங்களையும் இந்த விடயம் புண்படுத்தியுள்ளது. ஆதீனம் தற்போது இங்கு இல்லை. நான் இன்று காலையும் அவருடன் தொலைபேசியில் பேசியுள்ளேன். அவர் மட்டக்களப்புக்குச் சென்றுள்ளார். இன்று வருவேன் என்று சொல்லியிருக்கின்றார். இவர்கள் மீதான தாக்குதல் தொடர்பாகவும் இ.ந்த வழக்கின்போது கவனத்தில் எடுக்கப்படும். – என்றார்.

Previous Post

‘பொன்னியின் செல்வன்’ ரஜினிகாந்த் கொடுத்த தகவல்

Next Post

சஜித்தின் பெயர் ஏகமனதாக அறிவிப்பு- அஜித்

Next Post

சஜித்தின் பெயர் ஏகமனதாக அறிவிப்பு- அஜித்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நடிகர் பாரி இளவழகன் நடிக்கும் ‘அன்பே டயானா’ படத்தினை விளம்பரப்படுத்தும் பாடல் வெளியீடு

நடிகர் பாரி இளவழகன் நடிக்கும் ‘அன்பே டயானா’ படத்தினை விளம்பரப்படுத்தும் பாடல் வெளியீடு

July 4, 2026
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதித்துறையை சுயாதீனத்தை சீரழிக்கிறது | சஜித் பிரேமதாச

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதித்துறையை சுயாதீனத்தை சீரழிக்கிறது | சஜித் பிரேமதாச

July 4, 2026
எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை விடுவிக்குமாறு PEN International வலியுறுத்தல்!

எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை விடுவிக்குமாறு PEN International வலியுறுத்தல்!

July 4, 2026
டார்க் – திரைப்பட விமர்சனம்

டார்க் – திரைப்பட விமர்சனம்

July 4, 2026

Recent News

நடிகர் பாரி இளவழகன் நடிக்கும் ‘அன்பே டயானா’ படத்தினை விளம்பரப்படுத்தும் பாடல் வெளியீடு

நடிகர் பாரி இளவழகன் நடிக்கும் ‘அன்பே டயானா’ படத்தினை விளம்பரப்படுத்தும் பாடல் வெளியீடு

July 4, 2026
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதித்துறையை சுயாதீனத்தை சீரழிக்கிறது | சஜித் பிரேமதாச

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதித்துறையை சுயாதீனத்தை சீரழிக்கிறது | சஜித் பிரேமதாச

July 4, 2026
எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை விடுவிக்குமாறு PEN International வலியுறுத்தல்!

எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை விடுவிக்குமாறு PEN International வலியுறுத்தல்!

July 4, 2026
டார்க் – திரைப்பட விமர்சனம்

டார்க் – திரைப்பட விமர்சனம்

July 4, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures