Wednesday, September 10, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

திலீபன் நினைவு தின அனுஷ்டிப்பு | நீதிமன்றில் ஆஜராகுமாறு சிவாஜிலிங்கத்துக்கு அழைப்பு

January 1, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான  கூட்டணிக்குள் பிளவு  இல்லை!

திலீபனின் நினைவு தினத்தை அனுஷ்டித்தமை தொடர்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்தை 2023 ஜனவரி 11ஆம் திகதி புதன்கிழமை காலை 8 மணிக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு சமூகமளிக்குமாறு நீதிமன்றம் கட்டளை வழங்கப்பட்டுள்ளது.

எம்.கே சிவாஜிலிங்கத்தின் வீட்டுக்கு நேற்று வெள்ளிக்கிழமை (டிச. 30) சென்ற வல்வெட்டித்துறை பொலிஸார் நீதிமன்ற கட்டளையை வழங்கியுள்ளனர்.

தியாகி திலீபனின் நினைவு தினத்தை முன்னிட்டு நீதிமன்ற தடையை மீறி, தீலிபனின் நினைவு தினத்தை அனுஷ்டித்த குற்றச்சாட்டின் கீழ் எம்.கே.சிவாஜிலிங்கம் கோண்டாவில் பகுதியில் அன்னங்கை ஒழுங்கையில் வைத்து கடந்த 2020 செப்டம்பர் 15ஆம் திகதி கைதுசெய்யப்பட்டார்.

நீதிமன்ற தடையுத்தரவை மீறியமை மற்றும்  தடை செய்யப்பட்ட அமைப்பொன்றின் உறுப்பினரை நினைவுகூர்ந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டின் கீழ் யாழ். நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட எம்.கே. சிவாஜிலிங்கத்தை மன்று எச்சரித்து, 2 இலட்ச ரூபா கொண்ட சரீரப் பிணையில் விடுவித்திருந்தது.

இது தொடர்பாக வல்வெட்டித்துறையில் இன்று சனிக்கிழமை (டிச. 31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட  எம்.கே. சிவாஜிலிங்கம், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் என இலங்கை அரசாங்கம் தெரிவித்தாலும், அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், 

தீலிபனின் நினைவு தினத்தை அனுஷ்டித்தமை தொடர்பாக கைதுசெய்து, 24 மணிநேரம் தடுத்துவைத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பயங்கரவாத தடைச்சட்டத்தை வழக்கில் புகுத்தக்கூடிய வகையிலே பொலிஸார் முயற்சிகள் எடுத்ததை நான் அறிந்தேன்.

பின்னர் சாதாரண சட்டத்தின் கீழ் நான் முன்னிலைப்படுத்தப்பட்டேன். எது எப்படி இருந்தாலும், கடந்த ஆண்டு நடைபெற்ற விசாரணையின்போது பயங்கரவாத சட்டத்தின் கீழ், நாங்கள் இந்த வழக்கை தாக்கல் செய்ய யோசித்துள்ளோம். 

சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு இதன் கோவை அனுப்பப்பட்டுள்ளது என யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த அடிப்படையில் நேற்றைய தினம் எனது வீட்டுக்கு வந்த பொலிஸார் எனக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நீதிமன்ற கட்டளையை வழங்கிச் சென்றனர்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற செயலுக்காக, யாழ்ப்பாணத்தில் உயர்நீதிமன்றம் இருக்கத்தக்கதாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதன் நோக்கம் என்ன? 

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்தார்களா அல்லது பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒத்ததாக புலிகளின் மீளுருவாக்கம் போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்கிறதா என்பது குற்றப்பத்திரிகை வழங்கிய பின்னரே தெரியும்.

பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படும் என கூறப்படும்போது இவ்வாறான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது-என்றார்.

Previous Post

சோமாலிய கடற்கொள்ளையர்களை போல் அரசாங்கத்தை கைப்பற்றியுள்ள ரணில் | அநுரகுமார

Next Post

இராணுவத்தினர் வசம் உள்ள இந்து ஆலயங்கள் விடுவிக்கப்பட வேண்டும் | கலாநிதி ஆறுதிருமுருகன்

Next Post
மருந்துகளுக்கு தட்டுப்பாடு ; உதவ முன்வாருங்கள் –  ஆறுதிருமுருகன் கோரிக்கை

இராணுவத்தினர் வசம் உள்ள இந்து ஆலயங்கள் விடுவிக்கப்பட வேண்டும் | கலாநிதி ஆறுதிருமுருகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures