திருட்டு அலைபேசி ஒன்றினை வைத்திருந்த நபர் ஒருவரை இம்மாதம் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் இன்று உத்தரவிட்டார்.
மூதூர், தாஹா நகர் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் மூதூர் பகுதியில் பெருமதியான திருட்டு அலைபேசியை வைத்து பாவித்து வந்த நிலையிலே அலைபேசி உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய பொலிஸார் இரகசிய பதிவு இலங்கங்கள் மூலம் சந்தேக நபரை கைது செய்து மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
அலைபேசியை திருடிய நபரை கைது செய்யவுள்ளதோடு, மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.