Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

திருகோணமலையில் நான்கு வலம்புரிச் சங்குகளுடன் மூவர் கைது

February 12, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
திருகோணமலையில் நான்கு வலம்புரிச் சங்குகளுடன் மூவர் கைது

திருகோணமலை இறக்கக் கண்டி பகுதியில் நான்கு கோடியே 75 இலட்சம் ரூபா பெறுமதியான நான்கு வலம்புரிச் சங்குகளுடன் மூன்று சந்தேக நபர்கள்  செவ்வாய்க்கிழமை  (11) கைது செய்யப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர். 

சந்தேக நபர்கள் மூவரும் குறித்த வலம்புரிச் சங்குகளை விற்பனை செய்வதற்கு முயன்ற போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் .

வவுனியா பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபரும், இறக்கக் கண்டி பகுதியைச் சேர்ந்த வயது 33 மற்றும் 39 வயதுடைய இருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சங்குகள் கடலில் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து, சந்தேக நபர்கள் மூவரும் திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 05 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் மூவரும் எதிர்வரும் மார்ச் மாதம் 25 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதவானால் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Previous Post

குமாரபுரம் படுகொலை : நீதியற்று கடக்கும் இன்னொரு ஆண்டு

Next Post

அரச சேவையில் 7,456 பதவி வெற்றிடங்கள் ஆட்சேர்ப்புக்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம்

Next Post
உடனடியாக இரத்துச் செய்யப்படும் சுற்றறிக்கை | அரச ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு

அரச சேவையில் 7,456 பதவி வெற்றிடங்கள் ஆட்சேர்ப்புக்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures