தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 23 ஆப்கானிஸ்தான் இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர் என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தானில் உள்ள மிகப்பெரிய இராணுவத் தளங்களில் ஒன்றான ஹெல்மெண்ட் மீது நேற்று மற்றும் நேற்று முன்தினம் தலீபான் போராளிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 23 படையினர் கொல்லப்பட்டதோடு 15 பேர் காயமடைந்துள்ளனர் என அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர்தெரிவித்துள்ளார்.
கடந்த 48 மணித்தியாலங்களில் தலிபான் போராளிகள் நடத்திய 3 ஆவது தாக்குதல் இதுவென தெரிவிக்கப்படுகின்றது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் செயல்பட்டு வரும் தலீபான் தீவிரவாதிகளுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி தீர்மானம் எடுக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து அமெரிக்கா மற்றும் தலீபான் தீவிரவாதிகள் இடையே பேச்சுவார்த்தை நடந்தப்பட்டு வந்தது.
இதனிடையே தற்காலிக அடிப்படையில் இந்த பேச்சுவார்த்தை நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.