முல்லைத்தீவு மாவட்டத்தில் பணியாற்றும் படையினர் இருவர் தவறான முடிவு எடுத்து உயிரை மாய்க்க முற்பட்ட நிலையில், காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு 59ஆவது படைப் பிரிவைச் சேர்ந்த 42 வயதுடைய சிப்பாய் தவறான முடிவு எடுத்து உயிரை மாய்க்க முற்பட்டுள்ளார். அவர் சக படையினரால் காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மேலும் 68ஆவது படைப் பிரிவைச் சேர்ந்த 28 வயதுடைய சிப்பாய் தவறான முடிவு எடுத்து உயிரை மாய்க்க முற்பட்ட நிலையில் படையினரால் காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.