கட்டுநாயக்க அதிவேக வீதியுடன் புதிய களனி பாலத்தை இணைப்பதற்கான நிர்மானப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதால், பேலியகொட நுழைவாயில் இன்று முதல் தற்காலிகமாக மூடப்படவுள்ளது.
இதற்கான மாற்று வீதியானது, அதிவேக வீதிக்குள் நுழையும் பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின், அதிவேக வீதியின் நடவடிக்கை மற்றும் முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் எஸ். ஓபநாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்கான நிர்மானப்பணிகள் நிறைவடையும் வரை குறித்த மாற்றுவீதியைப் பயன்படுத்துமாறும் அவர் கூறியுள்ளார்.