Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தயிர் உறைகளில் இந்தியைத் திணிக்க முயற்சிப்பதா | வைகோ

March 30, 2023
in News, World, முக்கிய செய்திகள்
0
தயிர் உறைகளில் இந்தியைத் திணிக்க முயற்சிப்பதா | வைகோ

ஆவின் தயிர் உறைகளில் தஹி என்ற வார்த்தையை எழுத கட்டாயபப்டுத்தும் இந்திய உணவுப்பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் இந்தி திணிப்பு அறிவிக்கையை மத்திய அரசு உடனடியாகத் திரும்ப பெற வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தமிழ்நாடு, கர்நாடகா, கேரள மாநில அரசுகளுக்கு அனுப்பி உள்ள அறிவிக்கை மூலம் இந்தி மொழியைத் திணிக்க மத்திய பா.ஜ.க அரசு முனைந்து உள்ளது.

தமிழ்நாட்டின் ஆவின் நிறுவனம், கர்நாடகத்தின் நந்தினி பால் நிறுவனம்,கேரளாவின் மில்மா பால் நிறுவனம் உள்ளிட்ட பால் உற்பத்தியாளர் கூட்டமைப்புகள் விற்பனை செய்யும் தயிர் உறைகளில், “தஹி” என்ற இந்திச் சொல்லைத்தான் ஆகஸ்ட் – 1 ஆம் தேதி முதல் பயன்படுத்த வேண்டும். தயிர் உறைகளில் தயிரின் ஆங்கில பெயரை (Curd) நீக்க வேண்டும் என உத்தரவிட்டு இருக்கிறது.

ஆவின் தயிர் உறைகளில் ‘தயிர்’ என்ற சொல்லும், ‘Curd’ என்ற ஆங்கிலச் சொல்லும் இடம் பெற்று உள்ளன. இதில், ஆங்கில வார்த்தையை நீக்கி விட்டு, “தஹி” என்ற இந்தி சொல்லைக் கட்டாயமாக அச்சிட வேண்டும் என்று இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

உணவுப்பொருட்களை உறைகளில் அடைத்து விற்பனை செய்யும் நிறுவனங்கள், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் அனுமதியைப் பெற வேண்டும். அந்த அதிகாரத்தைப் பயன் படுத்தி, மத்திய பா.ஜ.க அரசு இந்தியைத் திணிக்க இந்த அத்து மீறலில் இறங்கி உள்ளது. மத்திய அரசின் அப்பட்டமான இந்தித் திணிப்புக்கு இது இன்னொரு எடுத்துக்காட்டு ஆகும். இத்தகைய இந்தித் திணிப்பு கடும் கண்டனத்துக்குரியது.

ஒன்றிய அரசின் உத்தரவுக்குப் பணியாமல் ஆவின் தயிர் உறைகளில் இந்தி சொல்லைப் பயன் படுத்த மாட்டோம் என திராவிட மாடல் தமிழ்நாடு அரசு பதிலடி கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது.

இந்திய உணவுப்பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் இந்தி திணிப்பு அறிவிக்கையை மத்திய அரசு உடனடியாகத் திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளதோடு, மத்திய அரசின் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக தனது கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.

Previous Post

பிரித்தானிய மன்னர் சார்ள்ஸ் ஜேர்மன் பாராளுமன்றத்தில் உரையாற்றுகிறார்

Next Post

மியன்மாரில் 40 அரசியல் கட்சிகள் கலைப்பு | இராணுவ ஆட்சியாளர்கள் அறிவிப்பு

Next Post
மியன்மாரில் 40 அரசியல் கட்சிகள் கலைப்பு | இராணுவ ஆட்சியாளர்கள் அறிவிப்பு

மியன்மாரில் 40 அரசியல் கட்சிகள் கலைப்பு | இராணுவ ஆட்சியாளர்கள் அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures