இலங்கையில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பில் தமிழக மக்களுக்கு எம்மீது எவ்வித கோபமும் கிடையாது. இதற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் தொடர்பு உள்ளது என்று மக்கள் கருதவில்லை. அவ்வாறு தொடர்புகள் ஏதும் இல்லை என்று தெரிவித்தார் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி.
சென்னையில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தமிழக மக்கள் மீது காங்கிரஸ் கட்சி மிகுந்த அன்பு கொண்டிருக்கிறது. தமிழகம் உட்பட பல மாநில கலாசாரங்கள் பாஜக அரசால் சீரழிக்கப்பட்டுள் ளன. நாக்பூரை தலைமையிடமாகக் கொண்டு மத்திய அரசு இயங்க முடியாது. தமிழகம் சீனாவுடன் போட்டி போடும் அளவிற்கு உற்பத்தி துறையில் திறமை காண்பித்துள்ளது.
தமிழகத்தை இந்தியாவின் உற்பத்தித் துறை மையமாக காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததும் மாற்றிக் காட்டுவோம் – என்று ராகுல் காந்தி மேலும் தெரிவித்தார்.