பெருந்தோட்டத் துறைக்கான தபால் சேவையை வினைத்திறனாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.
தொகுதி முறையிலான தபால் பெட்டிகளை பெருந்தோட்டக் குடியிருப்புக்களில் பயன்படுத்தவுள்ளதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டம் நுவரெலியா மாவட்டத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தபால் விநியோக சிக்கல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தபால்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
தபால் ஊழியர்களின் பற்றாக்குறை காரணமாகவே பெருந்தோட்டங்களுக்கான சேவையை முன்னெடுப்பதில் சிக்கல் நிலவுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதன் காரணமாக பொது இடத்தில் தபால் பெட்டியை நிறுவுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அதன்மூலம் காணப்படும் சிக்கல்களை நிவர்த்திப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.