தனியாக பயணிப்பது பற்றி தீர்மானம் ஒன்றினை இதுவரை எடுக்கவில்லை என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தமிழ் மக்கள் என்னை நம்பி இருக்கின்ற நிலையில், அவர்களுடனேயே இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “நான் வடமாகாண மக்களுடன் இருப்பதாக உறுதியளித்துள்ளேன். அவர்கள் என்மீது நம்பிக்கை கொண்டிருக்கின்றார்கள். ஆகவே அவர்களின் அபிலாஷைகளுக்கு காத்திரமான பணியை ஆற்றவேண்டிய கடமை உள்ளதை உணர்கின்றேன்.
தனியாக பயணிப்பது பற்றி தீர்மானிக்கவில்லை. ஆனால் தமிழ் மக்களின் கொள்கை, அரசியல் தீர்வு, அபிவிருத்தி செயற்பாடுகள் உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் அண்மைக்காலமாக சீர்தூக்கிப் பார்த்து ஆராய்ந்து வருகின்றேன்.
மேலும் தமிழ் மக்கள் வழங்கிய வாக்குறுதிகளின் பிரகாரமே, எமது மக்கள் வடக்கு மாகாண சபையில் ஆணையை வழங்கியுள்ளார்கள்.” என தெரிவித்துள்ளார்.