தன்னுடன் உள்ள தனிப்பட்ட கோபத்தை வைத்து அரசியலமைப்பை சிக்கலுக்குள்ளாக்கி நாட்டை வீழ்ச்சியை நோக்கி இட்டுச் செல்ல ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கக் கூடாது என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பில் பிரச்சினையை ஏற்படுத்தி, சட்டத்துக்கு முரணாகவும், சம்பிரதாயங்களையும் மறந்தும் செயற்படுவதன் மூலம் நாடு நெருக்கடிக்குள் தள்ளப்படுவதாகவும் முன்னாள் பிரதமர் மேலும் கூறியுள்ளார்.