Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தனிநாடு என்பது எனது நோக்கமில்லை | தமிழ் பொதுவேட்பாளர் அரியம் செவ்வி

September 1, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
தனிநாடு என்பது எனது நோக்கமில்லை | தமிழ் பொதுவேட்பாளர் அரியம் செவ்வி

மூன்று பிரதான வேட்பாளர்களினதும் தேர்த்ல் பிரச்சார கூட்டங்களில் தமிழ் மக்கள் குறித்து அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை என தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

அவர்கள் தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலில் தங்களிற்கு வாக்களிக்கவில்லை என்பதை உணர்வார்கள்,அவர்கள் தாங்கள் தவறிழைத்துள்ளதை உணர்ந்து தீர்வொனறை முன்வைப்பார்கள் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம். என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனிநாடொன்றை உருவாக்குவது எனது நோக்கம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கேள்வி ; ஜனாதிபதி வேட்பாளர் என்ற அடிப்படையில் வடக்குகிழக்கு மக்களிற்கான உங்களின் கொள்கைகள் திட்டங்கள் என்ன?

பதில்- வடக்கு மக்களிற்காக மாத்திரமல்ல கிழக்கு மக்களிற்காகவும், அங்கு தமிழ் மக்கள் அதிகளவில் வசிக்கின்றனர்.

சுதந்திரத்தின் பின்னர் இலங்கையில் தமிழர்கள் அடிமைகளாக்கப்பட்டுள்ளனர்.

வாழ்வாதாரம் பிரஜாவுரிமைகளை பெற முடியாதவாறு நாங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளோம். தமிழ் மக்களின் உரிமைகள் பறிபோயுள்ளன.

தமிழர் அதிகளவாக வாழும் பகுதிகளி;ல் பௌத்தமயமாக்கல் இடம்பெறுவதை இந்த தேர்தலில் முன்னிலைப்படுத்துவதற்காகவும் அதனை மக்கள் முன் கொண்டு செல்வதற்காகவுமே நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றேன்.

இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் நாங்கள் இதனையே தெரிவிக்கின்றோம்.

இந்த பிரச்சினைகள் தொடர்ந்தும் நீடிக்கின்றன,இனபிரச்சினைக்கு தீர்வை காணமுடிந்தால்,பொருளாதார பிரச்சினை தானாக முடிவிற்கு வந்துவிடும் இதுவே எனது நோக்கம்.

கேள்வி ;  இலங்கை தமிழ் மக்களிற்கு தனிநாடொன்றை உருவாக்க முயற்சி செய்வீர்களா?

பதில் ; தனிநாடொன்றை உருவாக்குவது எனது நோக்கம் இல்லை.ஆனால் முழுமையான சுதந்திரமே எனது நோக்கம்.

அவ்வாறான நோக்கம் இருந்தால் நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டிருக்க மாட்டேன்.

நான் நான் சமத்துவ அரசாங்கத்தை சமத்துவத்தை விரும்புகின்றேன்.கனடா சுவீடன் ஸ்கொட்லாந்து போன்ற நாடுகளில் காணப்படுவதை போன்ற சமத்துவ அரசாங்கத்தை உருவாக்குவதே எனது நோக்கம்.

கேள்வி ; இந்தியா சீனாவுடனான இலங்கையின் புவிசார் அரசியல் தொடர்புகள் குறித்த உங்களின் நிலைப்பாடு என்ன?

பதில் ;  இந்தியா எங்களின் அயல்நாடு புராதான காலத்திலிருந்து நட்பு நாடாக விளங்குகின்றது.சீனாவை பொறுத்தவரை அதற்கு இந்தியாவுடன் அரசியல் பகைமை போட்டி உள்ளது.

இருநாடுகளும் தங்களின் நலனிற்காக திட்டங்களை தீட்டுகின்றன,இலங்கைக்கு இந்த இரண்டு நாடுகளுடனும் உள்ள உடன்படிக்கை காரணமாக இலங்கைக்கு வாய்ப்புகள் உள்ளன.

இலங்கைக்கு இந்தியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள்  உதவுகின்றன,எங்களிற்கு அது பிரச்சினையில்லை.

ஆனால் நாங்கள் தமிழர்கள் 1948 ம் ஆண்டு முதல் பல தலைவர்களின் ஜனாதிபதிகளின் ஆட்சிகளின் கீழ் வாழ்ந்துள்ளோம், தேர்தல் வாக்குறுதிகள் முன்வைக்கப்பட்டன நிறைவேற்றப்படவில்லை.

நான் தேர்தலில் வெற்றிபெறுவதற்காக போட்டியிடவில்லை,தமிழ் மக்களின் தேவைகளிற்காக நாங்கள் போட்டியிடுகின்றோம் என்ற செய்தியை  தெரிவிப்பதற்காக நாங்கள் போட்டியிடுகின்றோம்,

கேள்வி ; ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுபவர் நாட்டை எப்படி அபிவிருத்தி செய்ய முடியும் என நினைக்கின்றீர்கள்?

பதில் ; மூன்று பிரதான வேட்பாளர்களினதும் தேர்த்ல் பிரச்சார கூட்டங்களில் தமிழ் மக்கள் குறித்து அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

ஆனால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுபவருக்கு நாங்கள் செய்தியொன்றை வைத்திருக்கின்றோம்.

அவர்கள் தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலில் தங்களிற்கு வாக்களிக்கவில்லை என்பதை உணர்வார்கள்,அவர்கள் தாங்கள் தவறிழைத்துள்ளதை உணர்ந்து தீர்வொனறை முன்வைப்பார்கள் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

Previous Post

ரணில் தோல்வியடைந்தால் முழு நாடும் தோற்கும் – வஜிர அபேவர்தன

Next Post

பிரிவினைவாதிகளின் டொலருக்காகவே 13ஐ அமுல்படுத்துவதாக ரணில், சஜித், அனுர வடக்குக்கு வாக்குறுதி – உதய கம்மன்பில

Next Post
நாம் அரசாங்கத்திடம் தோல்வியடைந்ததால் மக்கள் மத்தியில் உண்மையை உரைக்க வேண்டியுள்ளது – கம்மன்பில

பிரிவினைவாதிகளின் டொலருக்காகவே 13ஐ அமுல்படுத்துவதாக ரணில், சஜித், அனுர வடக்குக்கு வாக்குறுதி - உதய கம்மன்பில

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures