தேவி-2, சைரா நரசிம்ம ரெட்டி ஆகிய படங்களில் நடித்து வரும் தமன்னா, அடுத்தபடியாக சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அயோக்யா படம் வெளியானதும் தொடங்குகிறது. இந்தபடம் தவிர இன்னொரு புதுமுக இயக்குனர் இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் தயாராகும் ஒரு படத்திலும் விஷாலுக்கு ஜோடியாக நடிக்க தற்போது கமிட்டாகியிருக்கிறார் தமன்னா. ஆக, ஒரே நேரத்தில் விஷாலுடன் இரண்டு படங்களில் நடிக்கப்போகிறார் அவர்.
இதையடுத்து தமன்னா விடுத்துள்ள ஒரு செய்தில், இதுவரை நான் எனது உடல்வலிமை காட்டும் கதாபாத்திரங்களில் நிறைய நடித்திருக்கிறேன். ஆனால் இனிமேல் என் திறமைக்கு சவால் விடக்கூடிய வேடங்களில் நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறேன். அதனால் என்னிடம் கதை சொல்ல வரும் டைரக்டர் களிடமும் எனது கோரிக்கையை முன் வைத்து அதற்கேற்ற கதாபாத்திரங்களை தருமாறு கேட்டுக்கொண்டு வருகிறேன் என்று கூறியுள்ளார் தமன்னா.