Wednesday, May 14, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

டக்வேர்த் லூயிஸ் முறைமையில் அரை இறுதிக்கு முன்னேறியது இந்தியா

February 21, 2023
in News, Sports, முக்கிய செய்திகள்
0
டக்வேர்த் லூயிஸ் முறைமையில் அரை இறுதிக்கு முன்னேறியது இந்தியா

India's Smriti Mandhana plays a shot during the Group B T20 women's World Cup cricket match between England and India at St George's Park in Gqeberha on February 18, 2023. (Photo by Marco Longari / AFP)

0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

அயர்லாந்துக்கு எதிராக ஜீகுவேபேர்ஹா, சென் ஜோர்ஜ் விளையாட்டரங்கில் திங்களன்று (20) மழையினால் தடைப்பட்ட 2ஆம் குழு போட்டியில் டக்வேர்த் லூயிஸ் முறைமையில் 5 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இந்தியா, 3ஆவது அணியாக மகளிர் இருபது 20 உலகக் கிண்ண அரை இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இந்தியா, ஸ்ம்ரித்தி மந்தனாவின் அதிரடி துடுப்பாட்ட உதவியுடன் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 155 ஓட்டங்களைக் குவித்தது.

ஸ்ம்ரித்தி மந்தனா 56 பந்துகளில் 9 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 87 ஓட்டங்களை விளாசி இந்தியா பலமான நிலையை அடைய உதவினார். சர்வதேச இருபது 20 கிரிக்கெட்டில் மந்தனா பெற்ற அதிகூடிய ஓட்டங்கள் இதுவாகும்.

முதலாவது விக்கெட்டில் ஷஃபாலி வர்மாவுடன் 62 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்த மந்தனா, 2ஆவது விக்கட்டில் அணித் தலைவி ஹார்மன்ப்ரீத் கோருடன் மேலும் 52 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

ஷஃபாலி வர்மா 24 ஓட்டங்களையும் ஹார்மன்ப்ரீத் 13 ஓட்டங்களையும் பெற்றனர். அவர்களைவிட ஜெமிமா ரொட்றிகஸ் 19 ஓட்டங்களைப் பெற்றார்.

அயர்லாந்து பந்துவீச்சில் லோரா டிலேனி 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஓர்லா ப்ரெண்டர்காஸ்ட் 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

156 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து 8.2 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 54 ஓட்டங்ளைப் பெற்றிருந்தபோது கடுங்காற்றுடன் மழை பெய்ததால் ஆட்டம் தடைப்பட்டது.

அயர்லாந்தின் ஆரம்பம் சிறபப்பாக அமைய வில்லை. அமி ஹன்டர் (1), ஓலா ப்ரெண்டர்காஸ்ட் (0), ஆகிய இருவரும் முதலாவது ஓவரிலேயே ஆட்டம் இழந்தனர். (1 – 2 விக்.)

ஆனால், அதன் பின்னர் பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடிய கெபி லூயிஸ், அணித் தலைவி லோரா டிலேனி ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 52 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவுக்கு சவால் விடுத்தனர்.

அவர்களது துரதிர்ஷ்டம் மழை பெய்ததால் ஆட்டம் தடைப்பட்டது. அப்போது டக்வேர்த் லூயிஸ் முறைமையின் பிரகாரம் வெற்றி இலக்கு 60 ஓட்டங்களாக இருந்தது. அதன் பின்னர் ஆட்டம் கைவிடப்பட்டதால் இந்தியா 5 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

கெபி லூயிஸ் 5 பவுண்டறிகள் உட்பட 32 ஓட்டங்களுடனும் லோரா டிலேனி 3 பவுண்டறிகள் அடங்கலாக 17 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர்.

இன்று 2 போட்டிகள்

எட்டாவது ஐசிசி மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட்டில் கடைசி 2 முதலாம் சுற்று போட்டிகள் கேப் டவுனில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளன.

அவற்றில் 1ஆம் குழுவுக்கான கடைசி முதலாம் சுற்று போட்டி தென் ஆபிரிக்காவுக்கு தீர்மானம் மிக்க போட்டியாக அமையவுள்ளது. பங்களாதேஷுக்கு எதிராக நடைபெறவுள்ள அப் போட்டியில் தென் ஆபிரிக்கா வெற்றிபெற்றால் அணிகள் நிலையில் 2ஆம் இடத்தைப் பெற்று அரை இறுதியில் விளையாட தகுதிபெறும். தோல்வி அடைந்தால் அதன் அரை இறுதி கனவு தகர்ந்துவிடும்.

இக் குழுவிலிருந்து அவுஸ்திரேலியா ஏற்கனவே அரை இறுதிக்கு தகுதிபெற்றுவிட்ட நிலையில் நியூஸிலாந்துக்கும் தென் ஆபரிக்காவுக்கும் இடையில் இரண்டாவது அணியாக எந்த அணி அரை இறுதிக்கு செல்லும் என்ற போட்டி நிலவுகிறது.

இந்தப் போட்டி இலங்கை நேரப்படி இரவு 10.30 மணிக்கு ஆரம்பமாகிறது.

அப் போட்டிக்கு முன்னதாக இங்கிலாந்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான 2ஆம் குழுவுக்கான கடைசி முதலாம் சுற்று போட்டி மாலை 6.30 மணிக்கு ஆரம்பமாகும். இக் குழுவிலிருந்து இங்கிலாந்தும் இந்தியாவும் அரை இறுதிக்கு தெரிவாகிவிட்டதால் இந்தப் போட்டி அவ்வளவு முக்கியத்துவம் பெறாது.

Previous Post

பெனல்டி முறையில் அரை இறுதிகளில் SJC., HAH ; யாழ். அணிகளுக்கு ஏமாற்றம்

Next Post

எதிர்காலத்திற்கென சிறந்த அணியை உருவாக்க விரும்பும் சமரி

Next Post
எதிர்காலத்திற்கென சிறந்த அணியை உருவாக்க விரும்பும் சமரி

எதிர்காலத்திற்கென சிறந்த அணியை உருவாக்க விரும்பும் சமரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஜூனில் வெளியாகும் விமலின் ‘பரமசிவன் பாத்திமா’

ஜூனில் வெளியாகும் விமலின் ‘பரமசிவன் பாத்திமா’

May 14, 2025
தமிழினப் படுகொலையை சித்திரிக்கும் ஊர்தி பவனி யாழில் இருந்து ஆரம்பம்

தமிழினப் படுகொலையை சித்திரிக்கும் ஊர்தி பவனி யாழில் இருந்து ஆரம்பம்

May 14, 2025
ஆனையிறவு தேசிய உப்பள ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சிகள் எடுக்கப்படும் – அரசாங்க அதிபர்

ஆனையிறவு தேசிய உப்பள ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சிகள் எடுக்கப்படும் – அரசாங்க அதிபர்

May 14, 2025
கிளிநொச்சி – கிளாலியில் கடும் குடிநீர் நெருக்கடி ; பொது மக்கள் பாதிப்பு

கிளிநொச்சி – கிளாலியில் கடும் குடிநீர் நெருக்கடி ; பொது மக்கள் பாதிப்பு

May 14, 2025

Recent News

ஜூனில் வெளியாகும் விமலின் ‘பரமசிவன் பாத்திமா’

ஜூனில் வெளியாகும் விமலின் ‘பரமசிவன் பாத்திமா’

May 14, 2025
தமிழினப் படுகொலையை சித்திரிக்கும் ஊர்தி பவனி யாழில் இருந்து ஆரம்பம்

தமிழினப் படுகொலையை சித்திரிக்கும் ஊர்தி பவனி யாழில் இருந்து ஆரம்பம்

May 14, 2025
ஆனையிறவு தேசிய உப்பள ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சிகள் எடுக்கப்படும் – அரசாங்க அதிபர்

ஆனையிறவு தேசிய உப்பள ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சிகள் எடுக்கப்படும் – அரசாங்க அதிபர்

May 14, 2025
கிளிநொச்சி – கிளாலியில் கடும் குடிநீர் நெருக்கடி ; பொது மக்கள் பாதிப்பு

கிளிநொச்சி – கிளாலியில் கடும் குடிநீர் நெருக்கடி ; பொது மக்கள் பாதிப்பு

May 14, 2025
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures