ஜெயலலிதாவின் கடைசி ஆசையை நிறைவேற்றாத சசிகலா
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்போலோவில் சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்த போது, ஒரு கட்டத்தில் நினைவு திரும்பியிருக்கிறது.
அப்போது, மருத்துவர்களிடம், நான் இங்கே வந்து எத்தனை நாள் ஆகிறது? என்று கேட்டாராம்.
டாக்டர்கள் அதற்கு பதில் சொன்னவுடன், ‘ஐய்யோ..இவ்வளவு நாள் ஆகிவிட்டதா? மக்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்? உடனே என் புகைப்படத்தையும், அறிக்கையையும் வெளியிட ஏற்பாடு செய்யுங்கள்’ என்றாராம்.
இதை யாரிடம் சொல்வது என்று குழம்பிப்போன டாக்டர்கள், அந்த அறையை விட்டு வெளியே வந்து சசிகலா தரப்பினரிடம் சொல்லியிருக்கிறார்கள்.
‘சரி… நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’ என்று சொல்லி அனுப்பிவிட்டார்களாம். ‘இப்போதுதான் அனுதாபம் கூடிக்கொண்டிருக்கிறது.
இந்த சூழ்நிலையில், புகைப்படமெல்லாம் வேண்டாம். பிறகு பார்த்துக்கொள்ளலாம்’ என்று பேசிக்கொண்டார்களாம்.
அதன்பிறகு, சில நாட்களில் ஜெயலலிதா உடல்நிலை மீண்டும் மோசமடைந்திருக்கிறது.
அவரது கடைசி ஆசையை நிறைவேறாமல் செய்து விட்டது சசிகலா தரப்பு என்று அப்போலோ டாக்டர்கள் வெளிப்படையாக பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.