Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜெயலலிதாவின் இறப்பு டிசம்பர் 5 அல்ல..! அதுவும் பொய்யானது..!!

December 9, 2016
in News
0
ஜெயலலிதாவின் இறப்பு டிசம்பர் 5 அல்ல..! அதுவும் பொய்யானது..!!

ஜெயலலிதாவின் இறப்பு டிசம்பர் 5 அல்ல..! அதுவும் பொய்யானது..!!

ஜெயலலிதா எனும் தமிழருக்கான ஓர் உயிர் மரணித்துப்போனது. ஆனாலும் இவரை முன்னரே காப்பாற்றியிருக்கலாம். திட்டமிட்டே ஜெயலலிதா கொல்லப்பட்டிருக்கின்றார் என்ற சந்தேகம் மேலும் வலுப்பெறுகின்றது.

இருந்த போதும் ஜெயலலிதாவை காப்பாற்ற நடவடிக்கைகளை எடுத்திருக்க முடியும் என்பது தற்போது நிரூபனமாகிவிட்டதாக புதிய வகை விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அதாவது தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா மர்மமான முறையில் மரணமடைந்து விட்டார் என தமிழச்சி என்பவர் முன்னர் ஓர் கருத்தினை வெளியிட்டு பல்வேறு வகையான விமர்சனங்களுக்கு ஆளாகி இருந்தார்.

அப்போது அவர் மரண செய்தியை குறிப்பிட்டபோது அதே செய்தியில் அவர் தெரிவித்த வார்த்தைகள் இவை,

“நாளை ஜெயலலிதா இறந்து விட்டார் என்று அறிவிப்பார்களாயின் எனக்கு கிடைத்த நம்பகத்தன்மையான தகவல்களின் அடிப்படையில் தமிழக மக்கள் விழிப்படைய வேண்டும் என்பதற்காகவே இந்தத் தகவலை நான் உலக தமிழர்களுக்கு முன்வைக்கின்றேன்”.

மேலும் “ஜெயலலிதா இறந்து விட்டதாக நாளை அறிக்கை விடுவதற்கு முன்னர் அதில் உள்ள அரசியல் உள்நோக்கத்தினை மக்களிடம் முன்கூட்டியே அறிவிக்க விரும்புகின்றோம்”.

இது ஜெயலலிதா பற்றி இரண்டு மாதங்களுக்கு முன்னர் வெளிவந்த செய்தி அல்லது வதந்தியாக கூறப்பட்ட வார்த்தைகள்.

இதன் அடிப்படையில் அப்போது செயற்பட்டிருந்தால் இன்று தமிழக அம்மா சிலவேளை உயிருடன் இருந்திருக்கலாம். இப்போது விஷஊசியா? கொல்லப்பட்டாரா? என்ற வகையில் விமர்சிப்பது எதனையும் மாற்றி விடாது.ஆனாலும் வெளிவந்த இந்த செய்திகளின் உள்ளர்த்தத்தினை சரியாக புரிந்து கொண்டு செயற்பட்டிருக்கலாம், அதனை விடுத்து இதனை வெளியிட்டவர் ஓர் குற்றவாளியாகவே அனைவராலும் விமர்சிக்கப்பட்டார்.

இன்றைக்கு வெளிவரும் செய்திகளின் படி உண்மையில் ஜெயலலிதாவின் மரணம் திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமே வலுப்பெற்று வருகின்றது.

எனினும் அப்போது வெளிவந்த செய்திகளின் உண்மைத் தன்மையினை ஆராய்ந்திருந்தால் இப்போது இத்தகைய ஓர் இழப்பு தடுக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் தற்போதைய செய்திகளுக்கு அமைய ஜெயலலிதா டிசம்பர் 5ஆம் திகதிக்கு முன்னரே மரணித்திருக்கலாம் ஆனாலும் அதனை மறைத்து அரசியல் நாடகங்கள் அரங்கேற்றப்பட்டிருக்கலாம் என்றே கூறப்படுகின்றது.

இதனை வலுப்படுத்தும் வகையில் அவருடைய மரணம் தொடர்பிலான மர்மங்களும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது.

எனினும் தற்போது பலரும் பலவகையாக விமர்சனங்களை கூறினாலும், இறந்து விட்டார் ஓர் அற்புதப் பெண்மனி இனி மேலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படாவிட்டால் நாளை எத்தகைய இழப்புகள் ஏற்படும் என்பது எதிர்காலத்திற்கே வெளிச்சம்.

advertisement
Tags: Featured
Previous Post

முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்துவதை தவிர்க்க முடியாது – மீண்டும் நாடு சீரழிந்து விடும்.. நாடாளுமன்றில் ஆவேசம்!

Next Post

ஜெயலலிதா கன்னத்தில் இருந்த 4 புள்ளிகள்… எம்பார்மிங் செய்தது ஏன் தெரியுமா?

Next Post
ஜெயலலிதா கன்னத்தில் இருந்த 4 புள்ளிகள்… எம்பார்மிங் செய்தது ஏன் தெரியுமா?

ஜெயலலிதா கன்னத்தில் இருந்த 4 புள்ளிகள்... எம்பார்மிங் செய்தது ஏன் தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures