Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜெனிவாவை இலக்காக கொண்டு செயற்படவில்லை | நீதி அமைச்சர் அலிசப்ரி கேள்வி

February 6, 2022
in News, Sri Lanka News
0
அரசியல் கைதிகள் 27 பேர் விரைவில் விடுவிப்பு – நீதி அமைச்சர்

வடக்கில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களில் போராட்டங்களை நடத்திய குறிப்பிட்ட குழுவினருடன் பேச்சுவார்த்தைக செய்வதற்கு நான் தயாராகி அவர்களை அழைத்தபோது அவர்கள் வரவில்லை.

அவ்விதமானவர்களுக்கு எவ்வாறு தீர்வினை வழங்குவது என்று நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன் நீதி அமைச்சானது எதிர்வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரை மையமாகவைத்து எவ்விதமான செயற்பாடுகளையும் முன்னெடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் வடக்கில் நீதிக்கான அணுகல் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதைப் போன்று அடுத்தகட்டமாக கிழக்கிலும் பின்னர் தெற்கிலும் மலையகத்திலும் முன்னெடுக்கப்படவுள்ளது.

அவை இந்த ஆண்டுகள் முன்னெடுப்பதற்கு நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

நீதி அமைச்சின் நீதிக்கான அணுகல் வேலைத்திட்டமானது எதிர்வரும் கூட்டத்தொடரில் ஜெனிவாவை சமாளிப்பதற்கும் சர்வதேசத்தினை ஏமாற்றுவதற்குமாக முன்னெடுக்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நீதி அமைச்சர் அலி சப்ரி பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நீதிக்கான அணுகல் வேலைத்திட்டமான நீதி அமைச்சால் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டதொரு விடயமாகும். வடக்கு போரினால் பதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு பல்வேறு பட்ட நீதித்துறை சார்ந்த பிரச்சினைகள் ஏனைய மாகாணங்களை விடவும் அதிகமாக காணப்படுகின்றது என்ற அடிப்படையில் தான் வடக்கு மாகாணத்தில் முதலில் இந்த திட்டத்தினை செயற்படுத்துவது என்று தீர்மாகிக்கப்பட்டுது.

மேலும்ரூபவ் வலிந்து காணாமலாக்கப்பட்டவாகளுக்கான பணியகம், இழப்பீட்டுக்கான பணியகம், தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகம் ஆகிய கட்டமைப்புக்கள் எனது அமைச்சின் அதிகாரத்திற்கு உட்பட்ட விடயமாகும்.

ஆகவே அந்த மூன்று கட்டமைப்புக்களும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுடன் தொடர்புடையவை. அந்த அடிப்படையில் தான் வடக்கிற்கான விஜயத்தினை நான் உள்ளிட்ட எனது அமைச்சின் அதிகாரிகள் முன்னெடுத்திருந்தார்கள்.

இந்நிலையில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களில் ஒரு பகுதியினர் அங்கு போராட்டங்களை முன்னெடுத்திருந்தார்கள். அவர்களை நான் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்திருந்தேன். ஆனால் அவர்கள் வருவதற்கு மறுத்து விட்டார்கள். பேச்சுவார்த்தைக்கே வருவதற்கு மறுப்பவர்களுக்கு எவ்விதமாக தீர்வினை வழங்குவது?

நான், நீதி அமைச்சர் பதவியை வைத்துக்கொண்டு அரசியல் செய்யவில்லை. நான் எனக்கு கிடைத்த வாய்ப்பினைப் பயன்படுத்தி வடக்கோரூபவ் கிழக்கோரூபவ் தெற்கோ மக்களுக்கு என்னாலான நன்மையான விடயங்களை செய்வதற்கே முயற்சிக்கின்றேன்.

அந்தவகையில் தான் காணாமலாக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டுத்தொகையை வழங்குவதற்கு முயற்சிகளை எடுத்திருந்தேன். அவர்களின் நீண்டகாலமாக போராடிக்கொண்டிருப்பதை நான் அறிந்துள்ளேன். அதனால் அவர்கள் மீது எனக்கு கரிசனை உள்ளது. மேலும் அவர்களின் போராட்டம் நியாயமானது. ஜனநாயக ரீதியாக அவர்கள் போராடத் தகுதி உடையவர்கள்.

ஆனால் அவர்களின் அன்றாட வாழ்க்கைரூபவ் எதிர்காலம் குறித்து நான் கருத்திற்கொள்கின்றேன். அந்த அடிப்படையில் தலா ஒருஇலட்சம் ரூபா படி குடும்பங்ளுக்கு வழங்க முயற்சித்தேன். ஆனால் ஒருசிலதரப்புக்கள் அதனை குழப்புவதற்கு முயற்சித்தன.

இருப்பினும் முதற்கட்ட முயற்சியில் தலா ஒரு இலட்சம் ரூபா வீதம் ஆயிரும்பேருக்கு நூறு மில்லின் ரூபா வழங்கப்பட்டுள்ளன. இதனைவிடவும் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள், யாழ்.பல்கலை சட்டபீட மாணவர்கள் உள்ளிட்டவர்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளேன்.

தேசிய ஒருமைப்பாட்டை, நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாக இருந்தால் முதலில் அப்பணியை வடக்கில் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும். அதனையே தான் முன்னெடுத்துள்ளேன். மேலும் கொக்குவில் இந்துக்கல்லூருக்கு ஒருவருடத்திற்கு முன் திட்டமிட்டு 42மில்லியன் ரூபாவினை வழங்கியிருந்தேன்.

ஆகவே இவையெல்லாம் ஜெனிவாவை மையப்படுத்தி செயற்பட்ட விடயங்கள் என்று கூறுவது பொய்யானதொரு விடயமாகும். அரசியல் ஆதாயம் தேட விளைபவர்களே இவ்விதமான கருத்துக்களை மக்கள் மத்தியில் கூறுகின்றார்கள்.

நான் தற்போதும் பாதிக்கப்பட்ட மக்கள் உட்பட வடக்கு, கிழக்கு என்று எந்த வித்தியாசமும் இல்லாது யாருடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவும் இயலுமான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கவும் முயற்சிகளை எடுப்பதற்கு தயாராகவே உள்ளேன் என்றார்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

இங்கிலாந்தை வீழ்த்தி 5 ஆவது தடவையாகவும் இளையோர் உலக கிண்ணத்தை கைப்பற்றி இந்தியா சாதனை!

Next Post

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள சர்வதேச நிறுவனங்களுடன் பேசுவதில் தவறில்லை | விமல்

Next Post
ஹுசைன் ஒரு இராஜதந்திர விபச்சாரி – விமல்

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள சர்வதேச நிறுவனங்களுடன் பேசுவதில் தவறில்லை | விமல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

நாமலுக்கு எதிரான கிரிஷ் வழக்கு : ஜூலை மாதத்திற்கு ஒத்திவைப்பு

May 30, 2026
நடிகர் லெஜன்ட் சரவணன் நடிக்கும் ‘லீடர் ‘ திரைப்படத்தின் அதிரடியான எக்சன் கலந்த முன்னோட்டம் வெளியீடு

டிஜிட்டல் தளத்திலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் லெஜெண்ட் சரவணனின் ‘லீடர்’

May 30, 2026
மகளிர் தெற்காசிய கால்பந்தாட்ட சம்பியன்ஷிப்பில் பூட்டானிடம் பணிந்தது இலங்கை

மகளிர் தெற்காசிய கால்பந்தாட்ட சம்பியன்ஷிப்பில் பூட்டானிடம் பணிந்தது இலங்கை

May 29, 2026
சிறுமி பாலியல் பலாத்காரம்! பிணையில் சென்ற பல்லேகம ஹேமரதன தேரர்

அநுராதபுரத்தில் சிறுமி துஷ்பிரயோக வழக்கு ; பொலிஸார் பாரபட்சம் | தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு

May 29, 2026

Recent News

சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

நாமலுக்கு எதிரான கிரிஷ் வழக்கு : ஜூலை மாதத்திற்கு ஒத்திவைப்பு

May 30, 2026
நடிகர் லெஜன்ட் சரவணன் நடிக்கும் ‘லீடர் ‘ திரைப்படத்தின் அதிரடியான எக்சன் கலந்த முன்னோட்டம் வெளியீடு

டிஜிட்டல் தளத்திலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் லெஜெண்ட் சரவணனின் ‘லீடர்’

May 30, 2026
மகளிர் தெற்காசிய கால்பந்தாட்ட சம்பியன்ஷிப்பில் பூட்டானிடம் பணிந்தது இலங்கை

மகளிர் தெற்காசிய கால்பந்தாட்ட சம்பியன்ஷிப்பில் பூட்டானிடம் பணிந்தது இலங்கை

May 29, 2026
சிறுமி பாலியல் பலாத்காரம்! பிணையில் சென்ற பல்லேகம ஹேமரதன தேரர்

அநுராதபுரத்தில் சிறுமி துஷ்பிரயோக வழக்கு ; பொலிஸார் பாரபட்சம் | தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு

May 29, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures