Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜனாதிபதி பதவி விலகுவது தொடர்பில் கோட்டாபயவின் பின்னடிப்பில் மறைந்துள்ள ரகசியம்

July 10, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ஜனாதிபதி பதவி விலகுவது தொடர்பில் கோட்டாபயவின் பின்னடிப்பில் மறைந்துள்ள ரகசியம்

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய மக்கள் புரட்சியை அடுத்து ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக கோட்டபாய ராஜபக்ச உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். 

எதிர்வரும் 13ஆம் திகதி தனது பதவி விலகலை நாட்டு மக்களுக்கு அறிவிப்பார் என தனக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் அமைதியான முறையில் அதிகார மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதால் நாட்டில் மேலும் அமைதியின்மை ஏற்படக் கூடாது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் புரட்சி

ஜனாதிபதி பதவி விலகுவது தொடர்பில் கோட்டாபயவின் பின்னடிப்பில் மறைந்துள்ள ரகசியம் | The Secret Behind Gotabaya S Backlash

எனினும் நேற்று மாலைக்குள் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியில் இருந்து விலக தீர்மானித்திருந்தார் என செய்தி வெளியாகியிருந்தது. ஆனாலும் அரசியல் நோக்கங்களின் அடிப்படையிலேயே கோட்டாபய தனது பதவி விலகலை பிற்போட்டுள்ளார் என தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. 

திட்டமிட்டபடி ஜனாதிபதி நேற்று பதவி விலகியிருந்தால், சமகால  பிரதமர் ரணில் விக்ரமசிங்க தானாகவே பதில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார்.

ரணிலுக்கு எதிராக கோட்டாபயவின் சதி

ஜனாதிபதி பதவி விலகுவது தொடர்பில் கோட்டாபயவின் பின்னடிப்பில் மறைந்துள்ள ரகசியம் | The Secret Behind Gotabaya S Backlash

இந்நிலையில் அவ்வாறான நிலைமை ஏற்படுவதை தவிர்க்கவே, கோட்டாபய கால அவகாசத்தை கோரியுள்ளார். 

நேற்றைய தினம் ஜனாதிபதி மாளிகையை மக்கள் முற்றுகையிட்டதன் பின்னர், பிரதமர் பதவியில் இருந்து ரணில் விலக வேண்டும் என பல தரப்பினராலும் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

Previous Post

ஈஸி24நியூஸின் யூடியூப் செய்திகள்

Next Post

ஸ்ரீலங்கா முப்படையினர் விடுத்துள்ள வேண்டுகோள்!

Next Post
யாழ்ப்பாணத்துக்கு மேலும் தடுப்பூசிகளை வழங்கத் தயார் ;சவேந்திர சில்வா

ஸ்ரீலங்கா முப்படையினர் விடுத்துள்ள வேண்டுகோள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures