அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவே வேட்பாளராக போட்டியிட வேண்டும் என்பதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுதியாக உள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகியோருக்கு இடையிலான முன்மொழியப்பட்ட கூட்டணியைத் தவிர தமது நிலைப்பாடாக இந்த முடிவு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
அத்தோடு ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவே இருக்க வேண்டும் என்பதில் தமது கட்சி உறுதியாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் இரு கட்சிகளுக்கிடையிலான பரந்த கூட்டணி தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. இருப்பினும் வரவிருக்கும் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஸ்ரீ.ல.சு.க.வுடன் கைகோர்த்துச் செல்ல விரும்பும் ஏனைய அரசியல் கட்சிகளுடன் பரந்த கூட்டணியை அமைக்கும் எண்ணம் தமக்கு இருப்பதாகவும் அவர் கூறினார்.