ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்களுக்கு இடையில் இடம்பெறவிருந்த கூட்டத்தை புறக்கணிக்க ஐ.தே.மு. தீர்மானித்துள்ளது.
நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக சபாநாயகர் கரு ஜயசூரிய அனுப்பிவைத்த கடிதத்திற்கு ஜனாதிபதி அனுப்பிவைத்த பதில் கடிதத்தை தொடர்ந்து இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நம்பிக்கையில்லா பிரேரணையை ஏற்றுக்கொள்ளாமல் ஜனாதிபதி பதில் கடிதம் அனுப்பியுள்ளதால், ஜனாதிபதியுடனான சந்திப்பு அர்த்தமற்றதென கருதி இச்சந்திப்பை புறக்கணிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலைகளுக்கு மத்தியில் இன்றைய சந்திப்பு மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. எனினும், இச்சந்திப்பை புறக்கணித்துள்ளமை அரசியல் ஸ்திரமற்ற தன்மை நீடிக்க வழிவகுத்துள்ளதென அரசியல் அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.