Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

சோசியல் மீடியாவுக்கு மீண்டும் திரும்பிய பார்வதி

March 17, 2019
in Cinema
0

திறமையான நடிகை என பெயர் எடுத்த பார்வதிக்கு கடந்த வருடம் முழுதும் சோதனை காலம் என்றே சொல்லலாம்.. நடிகர் திலீப் விவகாரத்திற்கு பிறகு அவர் பொதுமேடைகளிலும் சோசியல் மீடியாவிழும் பிரபல நடிகர்களின் செயல்பாடுகள் குறித்து குறை சொல்வதும் கண்டனம் தெரிவிப்பதுமாக தனது செயல்பாடுகளை தொடர்ந்து வந்தார். குறிப்பாக கசபா என்கிற படத்தில் மம்முட்டி பெண்களை இழிவுபடுத்தும் விதமாக வசனம் பேசி நடித்ததை அவர் கண்டித்தார். அதேபோல திலீப் விவகாரத்தில் நடிகர் சங்கத் தலைவரான மோகன்லால் சரியான முடிவு எடுக்கவில்லை என்றும் விமர்சித்தார்.

இதையடுத்து சோசியல் மீடியாவில் இருதரப்பு ரசிகர்களும் பார்வதியை மிகக் கடுமையாக விமர்சித்தனர்.. ஒரு கட்டத்தில் இதனை தாங்க முடியாமல் சோசியல் மீடியாவை விட்டே விலகுவதாக அறிவித்து கடந்த நவம்பர் மாதம் அதிலிருந்து வெளியேறினார் பார்வதி. இந்த நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு மீண்டும் திரும்பியுள்ள பார்வதி, அதில் ஒரு கவிதையை பதிவிட்டு தனது சோஷியல் மீடியா பயணத்தை மீண்டும் தொடங்கியுள்ளார். மேலும் தான் நடித்துவந்த வைரஸ் என்கிற படத்தை முடித்துவிட்டு, தற்போது உயரே என்கிற படத்தில் நடித்து வருகிறார் பார்வதி.

Previous Post

லண்டன் மியூசியத்தில் தீபிகாவின் மெழுகு சிலை

Next Post

பிஎம் நரேந்திரமோடி: ஏப்ரல் 12ல் ரிலீஸ்

Next Post

பிஎம் நரேந்திரமோடி: ஏப்ரல் 12ல் ரிலீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures