சொந்த நிலத்தை காண இருபத்தெட்டு ஆண்டுகள் காத்திருந்த மக்கள்!
யாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் இருந்து கடந்த 31 ம் திகதி மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட 454 ஏக்கர் மக்களுடைய நிலத்தை இன்றைய தினம் காலை மக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 31ம் திகதி யாழ்.மாவட்டத்திற்கு விஐயம் மேற்கொண்ட ஐனாதிபதி வலி, வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள்ளிருந்து 454 ஏக்கர் நிலத்தை மக்களுடைய மீள்குடியேற்றத்திற்காக யாழ்.அரசாங்க அதிபர் என். வேதநாயகனிடம் கையளித்தார்.
இதனை தொடர்ந்து மேற்படி பகுதிகளை பார்வையிட இன்றைய தினம் நண்பகல் 12 மணிக்கு படையினர் அனுமதி வழங்கினர்.
இந்நிலையில் தமது காணிகளை பார்ப்பதற்காக அப் பகுதிகளை சேர்ந்த மக்கள் பலத்த ஆவலுடன் சென்று பார்வையிட்டனர்.
குறித்த பகுதிகளில் மக்களுடைய வீடுகள் பெரும்பாலும் இடித்து அழிக்கப்பட்டுள்ளது.
மேலும் மக்களுடைய காணிகளில் பாரிய குழிகள் உருவாகும்படி மண் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் பலத்த ஆவலுடன் 28 வருடங்களின் பின் தங்கள் சொந்த நிலத்தை பா ர்வையிட்டனர்.