வவுனியா செட்டிகுளம் நேரியகுளம் சந்தியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பலர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.
இந்த விபத்து இன்று அதிகாலை 8 மணியளவில் இடம்பெற்றதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.
செட்டிகுளத்தில் இருந்து வவுனியா நோக்கிச் சென்ற வவுனியா சாலைக்கு சொந்தமான அரச பேருந்து, நேரியகுளம் சந்தியில் சென்றுகொண்டிருந்தபோது கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த தனியார் பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் அரச பேருந்து தூக்கி வீசப்பட்டதுடன், அதில் பயணித்த பலர் காயமடைந்த நிலையில் செட்டிகுளம் மற்றும் வவுனியா வைத்தியசாலைகளில் அனுமதிக்கபட்டுள்ளனர்.
விபத்து தொடர்பாக செட்டிகுளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்