சீனாவின் வான் எல்லைக்குள் இந்தியாவின் ஆளில்லா விமானம் ஊடுருவி, விபத்துக்குள்ளானதாக சீனா குற்றம்சாட்டியுள்ளது.
இந்தியாவுக்கு சொந்தமான ஆளில்லா விமானம், சீன வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், ஆளில்லா விமானம் நொறுங்கி விழுந்ததாகவும், சோதனையில் அது இந்தியாவிற்கு சொந்தமானது என்பது தெரிய வந்துள்ளதாகவும் சீன ராணுவம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சீன ராணுவ அதிகாரி ஷங் சுய்லி கூறுகையில், “ இந்தியாவிற்கு சொந்தமான ஆளில்லா விமானம் சீனவான் எல்லைக்குள் ஊடுருவியது. அது விபத்திற்குள்ளானது.
சீனாவின் பிராந்திய இறையாண்மையை இந்தியா மீறியுள்ளது” என்றார். சீனாவின் வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் கென்ஜ் சுவாங் கூறுகையில், “தூதரகம் மூலமாக எங்கள்து எதிர்ப்பை பதிவு செய்வோம்” என்றார்.
இது தொடர்பாக இந்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஆளில்லா விமானம் இந்திய பிராந்திய பகுதியில் வழக்கம் போல் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தது. அப்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக கட்டுப்பாடு மையத்தினுடனான இணைப்பு துண்டிக்கப்பட்டு சிக்கிமில் உள்ள கட்டுப்பாடு கோட்டை தாண்டி சென்றுவிட்டது.
இது குறித்து சீனா ராணுவத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ஆளில்லா விமானம் இருந்த இடத்தை தெரிவித்தனர்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
சீன அமைச்சர் இந்தியா வருகைரஷ்யா, இந்தியா மற்றும் சீன வெளியுறவு துறை அமைச்சர்கள் பங்கேற்கும் கூட்டம் டெல்லியில் வரும் 11ம் தேதி நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக சீன வெளியுறவு துறை அமைச்சர் வாங் யி டெல்லிக்கு வருகை தருகிறார்.