சீன கம்யூனிச அரசு உருவான 70வது நினைவு தினத்தை முன்னிட்டு, சீனா ஆதரவு போராட்டக்காரர்கள், ஹாங்காங்கின் முக்கிய இடங்களில் ஒன்றுதிரண்டு, சீனாவின் தேசிய கீதத்தை பாடினர்.
சீனாவை ஆட்சி செய்த குவோமிந்தாங் கட்சிக்கு எதிராக கடந்த 1949ம் ஆண்டு சீன புரட்சி உருவானதை அடுத்து, கம்யூனிச கட்சி சீனாவை கைப்பற்றியது. சீனாவில் கம்யூனிச அரசு தோன்றி அக்டோபர் 1ம் தேதியுடன் 70 ஆண்டுகள் ஆகவுள்ள நிலையில், ஹாங்காங்கில் உள்ள சீன ஆதரவாளர்கள் சிவப்பு நிற டி-ஷர்ட் அணிந்து விக்டோரியா துறைமுகம் அருகே ஒன்று திரண்டனர்.
பின் சீனாவின் தேசிய கீதத்தை பாடியவர்கள், சீனா 70 வது பிறந்த நாளை காணுவதாக கூறி, சீன கொடிகளை பிடித்துக்கொண்டு, பிறந்த நாள் வாழ்த்து பாடல்களை பாடினர். இந்த நிகழ்வில் முகத்தில் சீனக்கொடியின் வண்ணம் தீட்டியபடி பங்கேற்ற 50 வயதான சீனா முன்னாள் வீராங்கனை Mandy Chan, சீன நாட்டை சேர்ந்தவள் என்பதில் தான் பெருமிதம் கொள்வதாக தெரிவித்தார்.
நிலைமையை கட்டுக்குள் வைக்க, போராட்டத்தில் ஈடுபடுபட்டவர்கள் மீது போலீசார் பெப்பர் ஸ்பிரே, கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைக்க முயன்றனர்.