Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

சிலம்பரசனின் குரலில் வெளியாகி கவனம் ஈர்க்கும் ‘ஏண்டி விட்டு போன..’

January 30, 2025
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
சிலம்பரசனின் குரலில் வெளியாகி கவனம் ஈர்க்கும் ‘ஏண்டி விட்டு போன..’

இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ டிராகன் ‘ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ ஏண்டி விட்டுப் போன ‘ எனும் பாடலும் , பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. 

தனித்துவமான குரலுக்கு சொந்தக்காரரான நடிகர் டி. ஆர். சிலம்பரசன் குரலில் இந்த பாடல் வெளியாகி இருப்பதால் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் ‘ டிராகன் ‘ எனும் திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கே. எஸ். ரவிக்குமார் , கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் , கயாடு லோஹர் ,மரியம் ஜார்ஜ், தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம் – கல்பாத்தி எஸ். கணேஷ்-  கல்பாத்தி எஸ். சுரேஷ் – ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ ஒரு நொடியில் காதல் நெஞ்சை உடைத்தாயேடி..’எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் கோ. சேஷா எழுத, பின்னணி பாடகரும், முன்னணி நட்சத்திர நடிகருமான டி. ஆர். சிலம்பரசன் பாடியிருக்கிறார். 

காதல் பிரிவை மையப்படுத்தி மெல்லிசையாக உருவாகி இருக்கும் இந்த பாடலில் இடம் பிடித்திருக்கும் வரிகளும், சிலம்பரசனின் குரலில் இழையோடும் சோகமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

 இதன் காரணமாக இந்தப் பாடல் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.

Previous Post

யோஷிதவிடமிருந்து ஐந்து துப்பாக்கிகள் மீட்பு

Next Post

சிக்குவாரா ரணில் – விசாரணையை ஆரம்பித்தது சி.ஐ.டி.!

Next Post
அநுரவின் அதிரடி அரசியல் ஆட்டம் : கைது செய்யப்படுவாரா ரணில்?

சிக்குவாரா ரணில் - விசாரணையை ஆரம்பித்தது சி.ஐ.டி.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures