சிறுவர் துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கும் தராதரம் பாராது மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரள தெரிவித்துள்ளார்.
பெல்மதுளை கணேகம ரஜமஹா விகாரையில் நேற்று(13) இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மரணதண்டனை அமுல் படுத்தப்படப் வேண்டுமென அரசாங்கம் தீர்க்கமான முடிவுக்கு வந்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போதைப்பொருட்கள் கடத்தலில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதிக்கப்பட வேண்டுமெனக் கூறி இதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றார்.
இத்துடன் சேர்த்து சிறுவர் துஷ்பிரயோகம், மற்றும் சிறுவர் கொலை ஆகிய குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கைகள் சமூக மட்டத்தில் எழுந்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.