Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சாந்தனின் உடல்நிலையை கருத்தில் கொண்டு விடுவிக்குக | தமிழ்தேசிய மக்கள் முன்னணி

January 29, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சாந்தனின் உடல்நிலையை கருத்தில் கொண்டு விடுவிக்குக | தமிழ்தேசிய மக்கள் முன்னணி

சாந்தனின் உடல் நிலையை கருத்தில்கொண்டும் இந்த அவசர சூழ்நிலையை கருத்தில் கொண்டும் இந்திய அரசும் மத்திய அரசும் தமிழக அரசும் இலங்கை அரசும் உடனடியாக நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என தமிழ்தேசிய மக்கள் முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளதாவது

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நீண்டகாலமாக சிறைத்தண்டனை அனுபவித்தவர்கள் இந்திய உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டபோதும் அவர்கள் சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டு சிறைக்கைதிகள் போல தமது வாழ்வை அனுபவித்து வருகின்றார்கள்.இவர்களில் இலங்கையை சேர்ந்தவர்கள் தாங்கள் இலங்கைக்கு சென்று குடும்பத்தவர்களுடன் இணைந்து வாழகோரிக்கை விடுத்துள்ள போதிலும் இன்றுவரை அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.

இந்த நிலையில் சாந்தன் குடும்பத்தினரின் வேண்டுகோளிற்கு இணங்க தமிழ்தேசிய மக்கள் முன்னணி மூன்றாம் திகதி இந்திய துணைத்தூதுவரை சந்தித்த இந்திய உயர்நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டவர்கள் தங்கள் குடும்பத்துடன் இணைந்து வாழவழிசெய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தது.

இந்த நிலையில் சுகயீனம் காரணமாக சாந்தனின் உடல்நிலை மோசமடைந்துள்ளமையானது அனைத்து தமிழ் மக்கள் மத்தியிலும் பாரிய அதிருப்தியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சாந்தனின் உடல் நிலையை கருத்தில்கொண்டும் இந்த அவசர சூழ்நிலையை கருத்தில் கொண்டும் இந்திய அரசும் மத்திய அரசும் தமிழக அரசும் இலங்கை அரசும் உடனடியாக பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொண்டு அவரை ஆபத்தான நிலையிலிருந்து மீட்டெடுத்து இலங்கைக்கு மீளத்திரும்பி குடும்பத்தினருடன் இணைந்து வாழ்வதற்கு ஆவணம் செய்யவேண்டும் எனவும் குறித்த வழக்கோடு சம்பந்தப்பட்டு உச்சநீதிமன்றினால் விடுவிக்கப்பட்ட இலங்கையை சேர்ந்த ஏனையவர்களும் தங்கள் குடும்பங்களோடு இணைந்து வாழ காலதாமதமின்றி நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவசரமான வேண்டுகோளை விடுக்கின்றோம்.

Previous Post

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை படுகொலை | 37 ஆவது நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

Next Post

எவர் கட்டுப்பாடு விதித்தாலும் நாளைவீதியில் இறங்குவோம் – ஐக்கிய மக்கள் சக்தி

Next Post
நாட்டு மக்களை பாதுகாக்கும் பொறுப்பை கடவுளிடம் ஒப்படைப்பதாயின் அரசாங்கம் எதற்கு?

எவர் கட்டுப்பாடு விதித்தாலும் நாளைவீதியில் இறங்குவோம் - ஐக்கிய மக்கள் சக்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures