கொழும்பு பொரளை வனத்தமுல்லை பகுதியில் உள்ள சஹஸ்புர அடுக்குமாடி குடியிருப்பில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயை அணைப்பதற்கு தீயணைப்பு படையினர் அங்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.