ஆஜன்டீனாவிலுள்ள புவர்னோஸ் அயர்ஸ் நகரில் நடைபெற்று வரும் ஜி-20 மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்ற சவுதி இளவரசர் முஹம்மத் பின் சல்மான், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் தனிப்பட்ட முறையில் உரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாநாடல் கலந்துகொள்ள வந்த உலக தலைவர்களுடனும் இவர் கலந்துரையாடியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த மாநாட்டில் சவுதி இளவரசர் முக்கிய பிரமுகராக காணப்படுவதாகவும் சவுதி ஊடகவியலாளர் கொலை வழக்கில் இளவரசர் சல்மானின் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் இதற்கான காரணம் எனவும் சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.