சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா எதிர்வரும் திங்கட்கிழமை (16) இலங்கைக்கு வருகைத்தரவுள்ளார்.
Beaches & Islands
மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ள அவர், எதிர்வரும் புதன்கிழமை வரை நாட்டில் தங்கியிருப்பார்.
தனது பயணத்தின் போது, அரச அதிகாரிகள் மற்றும் முக்கிய பங்குதாரர்களைச் சந்திப்பார் எனவும், டித்வா சூறாவளியின் தாக்கத்தை நேரடியாகக் பார்வையிடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் மீட்பு முயற்சிகளை ஆதரிப்பதற்கான வழிகள் மற்றும் அனைத்து இலங்கையர்களுக்கும் வலுவான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதையும் அவர் இந்த விஜயத்தின்போது விவாதிக்கவுள்ளார்.

