Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதியை அரசு மீறியுள்ளது | ஜி.எல். பீரிஸ்

October 8, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இரகசியமாக எதனையும் செயற்படுத்த வேண்டிய தேவை இல்லை – ஜி.எல்.பீரிஸ்

பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு பதிலாக புதிய பாதுகாப்பு சார் சட்டத்தை இயற்றும் வரை பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தப்போவதில்லை என சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதியை அரசாங்கம் மீறியுள்ளது.

இவ்வாறான நிலையில் எதிர்கால செயற்பாடுகளுக்கு எவ்வாறு சர்வதேசத்தின் நம்பிக்கையை வெற்றி கொள்ள முடியும் என முன்னாள் வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் சபையில் தெரிவித்தார்.

சபாநாயகர் தலைமையில் வெள்ளிக்கிழமை (ஒக் 7) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின்போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட பிரேரணை பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.

இம்முறை பெரும்பாலான ஆசிய நாடுகளான இந்தோனேஷியா, மலேசியா ஆகியவை கூட இலங்கைக்கு ஆதரவு வழங்கவில்லை.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி, பொருத்தமான பாதுகாப்பு சார் சட்டத்தை இயற்றும் வரை பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய சர்வதேசத்துக்கு வாக்குறுதி வழங்கினேன்.

சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதியை அரசாங்கம் வெளிப்படையாகவே மீறியுள்ள நிலையில் எதிர்கால செயற்பாடுகளுக்கு எவ்வாறு சர்வதேசத்தின் நம்பிக்கையை வெற்றிகொள்ள முடியும்.

உள்ளக பிரச்சினைகளுக்கு தீர்வு காண தேசிய இயந்திர ரீதியான திட்டங்கள் செயற்படுத்தப்படும் என வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி எவ்வாறு, எந்த நம்பிக்கையின் அடிப்படையில் சர்வதேசத்துக்கு குறிப்பிட்டுள்ளார். இலங்கை தொடர்பில் சர்வதேசத்தின் மத்தியில் தவறான நிலைப்பாடுகளே இன்றும் காணப்படுகிறது என்றார்.

Previous Post

மின்னல் தாக்கி பலியான பெண்

Next Post

வருங்கால மாப்பிள்ளைக்கு 125 உணவு வகைகளுடன் விருந்து கொடுத்த மாமியார்

Next Post
வருங்கால மாப்பிள்ளைக்கு 125 உணவு வகைகளுடன் விருந்து கொடுத்த மாமியார்

வருங்கால மாப்பிள்ளைக்கு 125 உணவு வகைகளுடன் விருந்து கொடுத்த மாமியார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures