Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சரத் பொன்சேகா வெளியிட்ட தகவல்

November 11, 2019
in News, Politics, World
0

அலுகோசுகளில் ஒருவரே ஜனாதிபதி வேட்பாளராக நிற்கின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு கோரி கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் இடம்பெற்ற பிரசார கூடடத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“2015ம் ஆண்டு வெற்றிக்காக நீங்கள் அளித்த ஆதரவை போன்று வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச அவர்களையும் நீங்கள் ஆதரிக்க வேண்டும்.

அதற்கு முன்பு மகிந்த ராஜபக்ச ஆட்சி காலத்தில் நரகத்தில் வாழ்ந்தோம். அது போன்ற உணர்விலே இருந்தோம். அவரை சுற்றியிருந்தவர்கள் அலுகோசுகள். அவர்களில் ஒரு அலுகோசுதான் ஜனாதிபதி வேட்பாளராக நிற்கின்றார்.

2015ம் ஆண்டு அவரை தோற்கடித்து அவரது மெதமுல்லையில் ஜன்னலில் தொங்க வைத்தோம். அதையே மீண்டும் செய்வோம். வெள்ளை வான் கலாசாரம் எமது ஆட்சிக்காலத்தில் தான் ஒழிக்கப்பட்டது.

மகிந்தவின் ஆட்சி காலத்தில் வெளிநாட்டு தூதர்கள் யாரும் அவர்களை சந்திக்க விரும்பவில்லை. அவர்கள் சமாதானத்தை விரும்பவில்லை என்பதே இதற்கு காரணம்.

லிபியாவின் சர்வாதிகாரியான கடாபியை, மகிந்த ராஜபக்ச சந்தித்து வந்த பின்னர் அந்த நாட்டு மக்களே புரட்சி செய்து கொன்றனர். அதே போன்றே மகிந்த அரசியல் புரட்சி மூலம் தூக்கியெறியப்பட்டார்.

தர்கா நகரில் முஸ்லிம்களுக்கு எதிராக ஏற்பட்ட கலவரம் கோத்தபாய ராஜபக்ச விருப்பத்திற்காக மேற்கொள்ளப்பட்டது. மீண்டும் ஒரு யுத்தத்தை இந்த நாட்டு மக்கள் விரும்பவில்லை .

ஒரு நாட்டிற்குள் இன்னொரு இனம் இரண்டாம் குடி மக்களாக வாழ்வதை நாங்கள் விரும்பவில்லை. மொட்டு கட்சிக்குள் இருப்பவர்களின் கை சுத்தமில்லாமல் இருக்கின்றனர். அவர்கள் ராஜாவாக இருக்க விரும்புகின்றனர்.

சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவதில் எமக்குள் சிக்கல்கள் இருந்த போதும் நாங்கள் பேசி முடிவெடுத்தோம். மகிந்த குடும்பம் அவ்வாறில்லை. அண்ணன் சொல்வார் அனைவரும் ஏற்க வேண்டும் .

சஜித் பிரேமதாச என்னை பாதுகாப்பு அமைச்சராக நியமிப்பதாக உறுதி வழங்கியுள்ளார். அவ்வாறான நல்ல மனிதர் சஜித் பிரேமதாச என்பதை கூறிக்கொள்ள விரும்ப விரும்புகிறேன்.

மீண்டும் ஒரு யுத்தம் இந்த நாட்டில் இடம்பெற விடமாட்டோம் . சஹ்ரான்கள் உருவாகவும் விடமாட்டோம் . அவர்களை ஆதரிப்போரையும் கண்காணித்து நல்வழிக்கு கொண்டு வருவோம்.

தண்ணீர் கேட்ட மக்களை சுட்டு கொன்றவர் கோத்தபாய ராஜபக்ச. இன்று இரவில் தூங்க முடியாது தவிக்கிறார் . சுட்டவர் சிறையில் இருக்கிறார் சுடச் சொன்னவர் வெளியில் ஜனாதிபதி வேட்பாளராக நிற்கின்றார்” என கூறியுள்ளார்.

Previous Post

கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட தமிழ் மாணவர்கள் – CIDயினர் தகவல்

Next Post

புர்கா அணிந்து வாக்களிக்க தடை – தேர்தல் ஆணைக்குழு

Next Post

புர்கா அணிந்து வாக்களிக்க தடை - தேர்தல் ஆணைக்குழு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நடிகர் அருள்நிதி நடிக்கும்’ அருள்வான்’ படத்தின் அப்டேட்

நடிகர் அருள்நிதி நடிக்கும்’ அருள்வான்’ படத்தின் அப்டேட்

June 28, 2026
2028 ரி20 மகளிர் உலகக் கிண்ணத்தில் விளையாட இலங்கை தகுதி

2028 ரி20 மகளிர் உலகக் கிண்ணத்தில் விளையாட இலங்கை தகுதி

June 27, 2026
முல்லைத்தீவு ஏம்பல் குளத்து நீரில் மூழ்கும் தட்டாமலை – ஒட்டுசுட்டானை இணைக்கும் வீதி ; சீரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

முல்லைத்தீவு ஏம்பல் குளத்து நீரில் மூழ்கும் தட்டாமலை – ஒட்டுசுட்டானை இணைக்கும் வீதி ; சீரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

June 27, 2026
யாழில் TIN நம்பர் பெறத் திரண்ட மக்கள்

12 மில்லியனுக்கும் அதிகமானோர் ‘ரின்’ இலக்கங்களை பெற்றுள்ளனர் ; 5 மில்லியன் பேர் காத்திருப்பதாக பிரதி அமைச்சர் நிஷாந்த தெரிவிப்பு

June 27, 2026

Recent News

நடிகர் அருள்நிதி நடிக்கும்’ அருள்வான்’ படத்தின் அப்டேட்

நடிகர் அருள்நிதி நடிக்கும்’ அருள்வான்’ படத்தின் அப்டேட்

June 28, 2026
2028 ரி20 மகளிர் உலகக் கிண்ணத்தில் விளையாட இலங்கை தகுதி

2028 ரி20 மகளிர் உலகக் கிண்ணத்தில் விளையாட இலங்கை தகுதி

June 27, 2026
முல்லைத்தீவு ஏம்பல் குளத்து நீரில் மூழ்கும் தட்டாமலை – ஒட்டுசுட்டானை இணைக்கும் வீதி ; சீரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

முல்லைத்தீவு ஏம்பல் குளத்து நீரில் மூழ்கும் தட்டாமலை – ஒட்டுசுட்டானை இணைக்கும் வீதி ; சீரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

June 27, 2026
யாழில் TIN நம்பர் பெறத் திரண்ட மக்கள்

12 மில்லியனுக்கும் அதிகமானோர் ‘ரின்’ இலக்கங்களை பெற்றுள்ளனர் ; 5 மில்லியன் பேர் காத்திருப்பதாக பிரதி அமைச்சர் நிஷாந்த தெரிவிப்பு

June 27, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures