Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சமையல் குறிப்புகள்

November 17, 2022
in News, சமையல், முக்கிய செய்திகள்
0
சமையல் குறிப்புகள்

*இட்லி பொடி செய்யும் போது சிறிது கறிவேப்பிலையைப் போட்டு அரைத்துச் செய்தால் ருசியும் கூடும். உடலுக்கும் நல்லது.

*முளை கட்ட வேண்டிய பயறுவகைகளை நீரில் எட்டுமணி நேரம் ஊற வைத்து, பின்னர் நீரை வடிய விட்டு, ஹாட்பேக்கில் போட்டு மூடிவைத்து, மறு நாள் திறந்து பார்த்தால் முளை கட்டிய தானியங்கள் ரெடி.

*தயிர் வடை செய்யும் போது வடையை பொரித்ததும் அதை சில நிமிடங்கள் தண்ணீரில் நனைத்து பின் தயிரில் போட்டால் நன்றாக ஊறும்.

*வெங்காயம் நன்றாக வறுபட, வெங்காயத் துண்டுகளை உப்பு தடவி பொடியாக நறுக்கி எண்ணெயில் வறுத்து எடுக்கவும்.

*சுண்டைக்காயை உப்பு, தயிர் விட்டு ஊறவைத்து வெயிலில் காயவைத்து வத்தக் குழம்பில் சேர்த்தால் குழம்பு சுவையாகவும், நன்றாகவும் இருக்கும்.

*வத்தக்குழம்பு செய்யும்போது, கடுகு தாளித்தவுடன், மிளகாய் பொடியை வறுத்துப்பின் புளியைக் கரைத்து விட்டால் குழம்பு மணமாக இருக்கும்.

*அவ்வப்போது மிக்ஸி ஜாரில் சிறிதளவு கல் உப்பை போட்டு அரைத்தால், மிக்ஸி பிளேடுகள் கூர்மை மங்காமல் இருக்கும். அரைத்த உப்பை டேபிள் சால்ட்டாகவும் பயன்படுத்தலாம்.

*சேனைக்கிழங்கினை வேகவைக்கும் முன் வெறும் பாத்திரத்தில் சிறிது உப்பை போட்டு, அடுப்பில் வைத்து அது சூட்டில் வெடிக்கும் வரை, வறுத்து பின்னர் தண்ணீர் ஊற்றி, தண்ணீர் கொதித்ததும் கிழங்கை போட்டால் கிழங்கு விரைவில் வெந்துவிடும்.

*சாம்பாரில் முருங்கைக்காயை அப்படியே நறுக்கிப் போடாமல் இரண்டாக கீறிப் போட்டால் சுவையும், மணமும் கூடும்.

*மோர்க்குழம்பு செய்யும்போது, மாம்பழத்தை துண்டாக வெட்டி போட்டால் மோர் குழம்பின் சுவை இனிப்பு+புளிப்பு கலந்த சுவையுடன் சூப்பராக இருக்கும்.

*தோசை வார்க்க நல்லெண்ணெய் பயன்படுத்தினால் கல்லில் தோசை ஒட்டாது. எண்ணெய்ச் செலவும் குறையும். உடம்புக்கும் நல்லது.

Previous Post

குழந்தைகளுக்கு சிறந்தது அப்பிள்…

Next Post

யுவதி கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம்

Next Post
பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு | ஏஎன்ஐ

யுவதி கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures