சபாஷ் லேடீஸ்! சாதனை படைத்த பெண்கள்
அடுத்த வருடம் மே மாதத்தில் ஆபிரிக்காவிலிருந்து ஒரு செயற்கைக்கேள் விண்ணை நோக்கி பாயவுள்ளது.
இது முற்றுமுழுதாக தனியார் செயற்கைக்கோளாக காணப்படுகின்றது.
இதனை தென்னாபிரிக்காவினை சேர்ந்த 14 டீனேஜ் பெண்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர்.
இச் செயற்கைக் கோள் ஆனது ஆபிரிக்க பகுதியில் உள்ள பூமியின் மேற்பரப்பு மற்றும் பூமியிலுள்ள குழிகள் தொடர்பாக ஆராய்ச்சிகளை மேற்கொள்ளக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் இயற்கை அனர்த்தங்கள், உணவு பாதுகாப்பு என்பவற்றினை மேம்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் செயற்கைக்கோள் ஏவுகை வெற்றியளிக்கும் பட்சத்தில் Namibia, Malawi, Kenya, மற்றும் Rwanda போன்ற நாடுகளில் உள்ளவர்களையும் இணைத்து மற்றுமொரு செயற்கைக்கோளினை உருவாக்க இந்த டீனேஜ் பெண்கள் எண்ணியுள்ளார்களாம்.