Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சனல் – 4 காணொளி : சர்வதேச விசாரணைகளை மேற்கொள்வோம் : மனுஷ

September 5, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
அரச ஊழியர்களுக்கு ஒரு முக்கிய அறிவித்தல்! எடுக்கப்பட்டுள்ள உடனடி நடவடிக்கை

அதிகாலையில் சென்று கோட்டபய ராஜபக்ஷவுக்கு வாக்களியுங்கள் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டார்.

அதே போல் ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவத்தை கண்ணீருடன் குறிப்பிட்டவர்கள் அனைவரும் கோட்டபய ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரத்துக்கு உடந்தையாக இருந்தார்கள்.

சனல் 4  வெளியிட்டுள்ள காணொளி தொடர்பில் சர்வதேச மட்டத்தில் விசாரணைகளை மேற்கொள்ள அவதானம் செலுத்தியுள்ளோம் என  வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் மற்றும் தொழில் அமைச்சர்  மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.  

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (05) இடம்பெற்ற அமர்வின் போது வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி  ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சனல் – 4 வெளியிட்டுள்ள காணொளி மற்றும் அதன் உள்ளடக்கம் பாரதூரமானது.

நாட்டு மக்களை கொன்று இரத்தத்தின் ஊடாக ஒரு தரப்பினர் ஆட்சியை கைப்பற்றியிருந்தால் அது குறித்து முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இந்த விடயம் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென்று கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் மனுஷ நாணயக்கார  ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் சனல்-4 வெளியிட்டுள்ள காணொளி குறித்து ஜனாதிபதி தலைமையில் திங்கட்கிழமை (04) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தினோம்.

இந்த விடயம் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழு ஊடாக விசாரணைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளோம். 

அத்துடன் தேவையாயின் சர்வதேச மட்டத்தில் விசாரணைகளை மேற்கொள்ளவும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் விவகாரம் குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதில் அரசாங்கம் ஒருபோதும் பின்வாங்காது.

ஜெனிவா கூட்டத்தொடர் இடம்பெறவுள்ள நிலையில் தான் இவ்வாறான காணொளிகள் வெளியாகுகின்றன.

கோட்டபய ராஜபக்ஷவின் தேர்தல் வெற்றிக்காக குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டதாக நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

அவ்வாறாயின் அதிகாலையில் சென்று  கோட்டபய ராஜபக்ஷவுக்கு  வாக்களியுங்கள் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அப்போது குறிப்பிட்டார்.

மறுபுறம் ஒருதரப்பினர் அழுதுகொண்டு ஒரு தரப்புக்கு சார்பாக செயற்பட்டார்கள். ஆகவே இவர்கள் அனைவரும் கோட்டபய ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரத்துக்கு உடந்தையாக  செயற்பட்டவர்களாக கருத வேண்டும் என்றார்.

Previous Post

ராகவா லோரன்ஸ் நடிக்கும் ‘சந்திரமுகி 2′ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

Next Post

சனல் 4 குற்றச்சாட்டுகள் – சாணக்கியன் கருத்து என்ன?

Next Post
காபுலில் போல இலங்கையிலும் மக்கள் நாட்டை ஓடும் நிலை உருவாகும்:  சாணக்கியன்

சனல் 4 குற்றச்சாட்டுகள் - சாணக்கியன் கருத்து என்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures