மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஈரளக்குளம் காட்டுப் பகுதியில் சட்டவிரோத கட்டுத் துப்பாக்கியுடன் வேட்டைக்குச் சென்றவர் படுகாயமடைந்து மரணம்.
மேற்படி குறித்த நபர் ஈரக்குளம் காட்டுப்பகுதிக்குள் சட்டவிரோத கட்டு துப்பாக்கியுடன் வேட்டைக்கு சென்ற வேளை துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனவே இந்நிலையில் தீவிர சிகிச்சை பயனளிக்காமல் இவர் நேற்று உயிரிழந்துள்ளார்.என ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.மேலும் குறித்த நபர் முறக்கொட்டான்சேனையைச் சேர்ந்த கணேசமூர்த்தி கருணாகரன் வயது 25 என இனங்காணப்பட்டுள்ளார்.இது தொடர்பான விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

